For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஞ்சியில் ஏரிகள் உடைந்தன: சூழ்ந்தது வெள்ளம்

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 ஏரிகள் உடைந்து பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. விடிய விடிய பலத்த மழை கொட்டியது. இதனால்மாவட்டத்தில் உள்ள ஏரிகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. தாம்பரம் அருகே உள்ள அஸ்தினாபுரம் ஏரி,நெமிலிச்சேரி ஏரி, அசரம் தென் ஏரி ஆகிய ஏரிகள் நிரம்பி வருகின்றன.

இதனால் தாம்பரம் பாரதிதாசன் காலனி, சத்யா நகர், பாரதி நகர் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் சூழ்ந்தது. மறைமலை நகர்அருகேயுள்ள சிங்கபெருமாள் கோவில் பக்கம் உள்ள விஞ்சியம்பாக்கம் ஏரி நிரம்பியதால் ஜி.எச்.சாலையில் வெள்ளம்பெருக்கெடுத்து ஓடுகிறது.

சாலைக்கு மேல் குளம் போல் வெள்ளம் சூழ்ந்து உள்ளதால் அங்கு வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.குரோம்பேட்டை பக்கம் உள்ள ராஜகீழ்ப்பாக்கம் ஏரி, மன்னிபாக்கம் ஏரி, நெடு குன்றம் ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டது.இதனால் அருகில் உள்ள பகுதியில் தண்ணீர் புகுந்தது.

நெடுகுன்றம் ஏரியில் உடைப்பு ஏற்பட்டதால் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்தது. ஏரிகள் உடைந்ததால்பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு சென்று மணல் மூட்டைகளை அடுக்கி உடைப்புகளை சரி செய்யும் முயற்சிகளில்ஈடுபட்டனர்.

கேளம்பாக்கத்தில் வெள்ளம்:

கேளம்பாக்கத்தை அடுத்த தையூர் ஊராட்சியில் கோமா நகர், பெரியபின்னேரி, செங்கன்மால், புதிய காலனி, பாலமா நகர்உள்ளிட்ட 8 கிராமங்கள் உள்ளன. நேற்று இரவு பெய்த பலத்த மழை காரணமாக தையூர் பகுதியில் உள்ள கல்லேரி உடைந்தது.

இதனால் தையூர் ஊராட்சியில் உள்ள 8 கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கியது. இதை தொடர்ந்து அந்த பகுதியைச் சேர்ந்தஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பழைய மகாபலிபுரம் சாலை வெங்கன் மால் பகுதிக்கு வந்தனர். தங்களுக்கு உடனடியாகநிவாரண உதவி வழங்க வேண்டும் என்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஏரியில் மூழ்கிய வீடுகள்:

மதுராந்தகத்தை அடுத்த கொளப்பாக்கம் கிராமத்தில் 125 வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் நேற்று இரவு பெய்த மழையால்மாம்பட்டு ஏரி உடைந்தது. இதில் கெளப்பாக்கம் கிராமத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

செங்கல்பட்டு அருகே நந்திரவரம் ஏரி நிரம்பியதில் அதில் கட்டப்பட்டிருந்த 600 வீடுகள் நீருக்குள் மூழ்கிவிட்டன. இப்பகுதிகளில் வசித்தவர்கள் மீட்கப்பட்டு கல்யாண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X