எங்கெங்கும் வெள்ளம்: இருளில் மூழ்கிய சென்னை- மக்கள் பரிதவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Army on relief work
சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று காலை வரை ஒரே நாள் இரவில்வரலாறு காணாத அளவுக்கு கொட்டித் தீர்த்தது மழை.

இடைவிடாது பெய்த மழையால் சென்னை நகரின் எல்லாப் பகுதிகளிலும் கரைபுரண்டு ஓடுகிறது வெள்ளம். பல பகுதிகளில்மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பல ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் லட்சக்கணக்கானவர்கள் தண்ணீரில்தத்தளிக்கின்றனர்.

தற்போதைய நிலையில் தண்ணீர் வடிய பல நாட்களாகும் என்பதால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. வடதமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் கடந்த மாத இறுதியில் கொட்டிய மழை காரணமாக பல லட்சக்கணக்கான மக்கள்பாதிக்கப்பட்டனர்.

மாநிலம் முழுவதும் மெல்ல, மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பி வந்த நிலையில், வங்கக் கடலில் மீண்டும் உருவான புயல் வடதமிழகத்தை மிரட்டி வருகிறது. நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மிகக் கடுமையாக பெய்தமழை சென்னையை மீண்டும் தீவு போல ஆக்கி விட்டது.

கடந்த நான்கு நாட்களாகவே, சென்னை வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்தபடி இருந்ததால், அரசுஇயந்திரங்கள் புயலை எதிர்கொள்ளத் தயாராகி விட்டன.

சமீபத்தில் உருவான புயல் சின்னம் வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமான நிலையிலும், நேற்று முன்தினம் காலை முதல்பலத்த மழை பெய்யத் துவங்கியது. நேற்று அதிகாலையில் இடி, மின்னலுடன் மழை பொழிந்ததால், புளியந்தோப்பு,மடிப்பாக்கம், நங்கநல்லூர், கிண்டி, ஆதம்பாக்கம், பழைய பல்லாவரம், ஆலந்தூர், வேளச்சேரி, தாம்பரம் என்று சென்னைநகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளக்காடாகின. ஒரே நாள் இரவில் கொட்டித் தீர்த்த வரலாறு காணாத மழையால்சென்னையிலும், அதைச் சுற்றியுள்ள ஏரிகளும் உடைப்பெடுத்தன.

Chennai
நெடுங்குன்றம் ஏரி, சேலையூர் ஏரி, அரண்வாயல் ஏரி, திருவாங்கருணை ஏரி, ஏலகாய் மங்கலம் ஏரி, கல்லேரி, ராஜகீழ்ப்பாக்கம் ஏரிகள் உடைப்பெடுத்து ஊருக்குள் தண்ணீர் புகுந்த வண்ணம் உள்ளது. கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி, கிண்டி,ஜாபர்கான் பேட்டை, அசோக் நகர் உள்ளிட்ட 12 இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

ஏழுகிணறு, விருகம்பாக்கம், கிண்டி, எண்ணூர், வளசரவாக்கம் பகுதிகளில் வீட்டு சுவர் இடிந்து விழந்தன. கண்ணுக்கெட்டியதூரம் வரை மடிப்பாக்கம், வேளச்சேரி பகுதி கடல் போல் காட்சியளிக்கின்றன. ஏரிப் பகுதிகளை ஆக்கிரமித்து வீடுகளைக்கட்டியவர்கள் அனைவரும் வெளியேற முடியாமல் அச்சத்துடன் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

வெள்ளத்தில் சிக்கிய சிலரை ராணுவ ஹெலிகாப்டர் மீட்டது. சென்னையில் மூன்று லட்சம் பேர் வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது.வெள்ளம் காரணமாக, சென்னையில் ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

Chennai
வெள்ளம் சூழ்ந்த துரைப்பாக்கம், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் வடிய வழியேயில்லை. மழைநீர் சாக்கடை நீருடன்சேர்ந்து ஓடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. பாதுகாப்பு நடவடிக்கையாக, பெரும்பாலான இடங்களில் மின் துண்டிப்புசெய்யப்பட்டது.

மெரீனாவில் கடல் சீற்றம் அதிகமாக இருந்த காரணத்தால் மீனவர்கள் யாரும் பல நாட்களாக மீன் பிடிக்கக் கடலுக்குள்செல்லவில்லை. மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜுரம், வாந்தி பேதி போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம்உள்ளதால் அவர்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

அதன்படி சென்னை நகர் முழுவதும் மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறையைச் சேர்ந்த 10 குழுக்கள் மாத்திரை, மருந்துகளைபாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவுள்ளன

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+