கண்ணிவெடிக்கு 6 இலங்கை ராணுவத்தினர் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
யாழ்பாணத்தில் சக்தி வாய்ந்த கண்ணி வெடி வெடித்து 6 இலங்கை ராணுவ வீரர்கள் பலியாயினர். இதனால் அங்கு பெரும்பதற்றம் ஏற்பட்டுள்ளது.நேற்று இச் சம்பவம் நடந்தது. ராணுவத்தினர் சென்ற டிராக்டர் டிரெலர் கண்ணிவெடி மீது ஏறியது. இதையடுத்து அது வெடித்துச்சிதறியதில் டிராக்டர் சின்னாபின்னாவானது.
இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கிப் போய், இரு தரப்புக்கும்இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், நடந்துள்ள இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரு விடுதலைப் புலிகள் அடாையளம் தெரியாத கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந் நிலையில்ராணுவத்தினர் 6 பேர் கண்ணி வெடிக்குப் பலியாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications