வெள்ளத்தில் சுடுகாடு: இடமின்றி தவித்த பிணம்
பொன்னேரி:
திருவள்ளூர் மாவட்டம் பெரும்பேடு கிராமத்தில் சுடுகாடு வெள்ள நீரில் மிதந்ததால், மரணமடைந்த விவசாயியின் உடலைப்புதைக்க இடமில்லாமல் அவரது உறவினர்கள் பரிதவித்தனர்.
ஆரணியாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், பெரும்பேடு கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்தது. வெள்ள நீர் திடீரென புகுந்ததைக்கண்டு பீதியடைந்த கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறினர். அப்போது ஏழுமலை என்ற 56 வயது விவசாயிகீழே விழுந்து இறந்தார்.வெள்ள நீர் புகுந்த பீதியில் இருந்த கிராம மக்களுக்கு, ஏழுமலை இறந்தது பெரும் சோகத்தைக் கொடுத்தது. உறவினர்கள் கூடிவீட்டு முன்பு தேங்கியிருந்த இடுப்பளவு தண்ணீரில் நின்றபடியே ஏழுமலைக்கு இறுதி மரியாதைகள் செலுத்தினர்.
பின்னர் அவரது உடலை எரியூட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் தொடர்ந்து மழை பெய்ததாலும், எங்கு பார்த்தாலும் நீராகஇருப்பதாலும், உடைலப் புதைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து உடலை சுடுகாட்டுக்குக் கொண்டு சென்றனர். ஆனால்சுடுகாடே தெரியாத அளவுக்கு தண்ணீர் சூழ்ந்து நின்றது.
இதனால் பிணத்தைக் கையில் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் ஏழுமலையின் உறவினர்கள் விழித்தனர்.அப்போது மேடான ஒரு பகுதியில் தண்ணீர் இல்லாதது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு பிணத்தைக் கொண்டு சென்றுபுதைத்து விட்டு பத்திரமான இடங்களுக்கு கிராமத்தினர் சென்றனர்.












Click it and Unblock the Notifications