வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு விஜயகாந்த் ஆறுதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரை நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவருமானவிஜயகாந்த் சந்தித்து ஆறுதல் வழங்கி நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

சென்னை கோட்டூர்புரத்தில் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு நடிகர் விஜயகாந்த், தேமுதிகஅவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் படகுகளில் சென்றனர். அங்கு பாதிக்கப்பட்டோரை சந்தித்துவிஜயகாந்த் ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர்களுக்கு பால், பழம், காய்கறிகள், ரொட்டி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை விஜயகாந்த் வழங்கினார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தைச் சேர்ந்த 39 எம்.பிக்களும், 12 மத்திய அமைச்சர்களும் மத்தியஅரசிடம் வாதாடி, பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு அனைத்து உதவிகளையும் பெற்றுத் தர வேண்டும்.

இது அவர்களது கடமை, பொறுப்பு. மாநில அரசு விரைவான நடவடிக்கை மேற்கொண்டதால் பல உயிர் பாதிப்புகள்தவிர்க்கப்பட்டுள்ளன. அதேபோல, நிவாரண உதவிகளை வழங்குவதில் மத்திய அரசும் விரைந்து செயல்பட வேண்டும், மந்த கதிஇருக்கக் கூடாது.

சுனாமியால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டது. இப்போது இந்த மழை வெள்ளத்தால் பெரும் பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளது.மற்றபடி இரு சேதமுமே ஒன்றுதான், இதை தேசிய சீரழிவாக கருதி மத்திய அரசு விரைவான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்என்றார் விஜயகாந்த். பாதிக்கப்பட்டோருக்கு 9000 இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டதாக தேமுதிகவினர்தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+