சிகாகோ: ரன்வேயை தாண்டி ஓடிய விமானம்- காரில் மோதில் சிறுவன் பலி
சிகாகோ:
அமெரிக்காவின் சிகாக்கோ விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ரன் வேயைத் தாண்டி ஓடி விமான நிலையத்தின் சுற்றுச்சுவரையும் உடைத்துக் கொண்டு சாலையில் சென்ற கார்கள் மீது மோதியது. அதில் ஒரு காரில் இருந்த 6 வயது சிறுவன்பலியானான்.
சிகாகோவில் பனி கொட்டி வருகிறது. இந் நிலையில் இந்திய நேரப்படி இன்று காலை (அமெரிக்க நேரப்படி நேற்றிரவு)பால்டிமோரில் இருந்து வந்த செளத் வெஸ்ட் ஏர்லைன்சின் போயிங் 757 விமானம் சிகாக்கோவில் தரையிறங்கியது.ரன் வே முழுவதும் பனி நிரம்பிய நிலையில் பலத்த காற்றும் வீசியது. அப்போது தரையிறங்கிய அந்த விமானத்தின் முன் பகுதி ரன்வேயில் மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்து ரன் வேயில் வழுக்கிக் கொண்டு மிக வேகமாக ஓடிய அந்த விமானம்,ரன்வேயின் கடைசியில் இருந்த இரும்புத் தடுப்புச் சுவரையும் இடித்து உடைத்துக் கொண்டு சாலைக்கு வந்தது.
அப்போது அந்தச் சாலையில் சென்று கொண்டிருந்த 2 கார்கள் விமானத்தின் மீது மோதின. இதில் ஒரு கார் அப்பளமாகநொறுங்கியது. அதிலிருந்த 6 வயது சிறுவன் பலியானான். அதிலிருந்த மேலும் 2 குழந்தைகளும், அவர்களது தந்தையும்,தாயாரும் காயமடைந்தனர். இதில் தந்தையும் மேலும் ஒரு குழந்தையின் நிலைமையும் மோசமாக உள்ளது.
இன்னொரு காரில் இருந்த 4 பேரும் காயமடைந்தனர். விமானப் பயணிகள் 3 பேரும் லேசான காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications