போலி எப்.ஐ.ஆர்: போலீஸ் காவலில் சங்கர்

Subscribe to Oneindia Tamil

சேலம்:

போலி எப்.ஐ.ஆர் அச்சடித்த விவகாரத்தில் சிக்கியுள்ள அச்சக அதிபர் சங்கரை போலீஸ் காவலில் எடுத்து அவரிடம் தீவிரவிசாரணை நடத்த சேலம் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

சேலத்தைச் சேர்ந்த கீர்த்தனா பிரிண்டர்ஸ் என்ற அச்சகத்தை நடத்தி வரும் சங்கர், காவல்துறையினர் சிலரின் துணையோடு,போலியான எப்.ஐ.ஆர் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் ஆவணங்களை அச்சடித்து அதை கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி,கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட காவல் நிலையங்களுக்கு சப்ளை செய்துள்ளார்.

இந்த போலி ஆவணங்கள் மூலம், போலீஸார் லட்சக்கணக்கில் காசு பார்த்துள்ளனர். சட்டவிரோதமாக நடந்த இந்த மோசடிதற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சங்கரை காவலில் எடுத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த சேலம் போலீஸார்முடிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவரை காவலில் எடுப்பதற்கு அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்படவுள்ளது.

இந்த நிலையில் புதிய பூதம் ஒன்றும் கிளம்பியுள்ளது. பொதுவாக கார் அல்லது வாகனம் ஏதாவது விபத்திலோ, தீவிபத்திலோசேதமடைந்து போனால் அதற்குரிய இன்சூரன்ஸ் பணத்தை அல்லது அதற்குப் பதில் புதிய வாகனத்தை வாங்க முடியும். இதற்குசம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலிருந்து, முதல் தகவல் அறிக்கை நகலை வாங்கி இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தாக்கல் செய்யவேண்டும்.

சங்கரின் திருவிளையாடல் மூலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் போலியான எப்.ஐ.ஆர். நகலைப் பயன்படுத்திஏராளமானோர் இன்சூரன்ஸ் நிறுவனங்களிலிருந்து லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

சங்கர் விவகாரம் தற்போது வெளி வந்துள்ளதைத் தொடர்ந்து தங்களிடம் சேத நஷ்ட ஈடு கோரி தாக்கல் செய்யப்பட்ட முதல்தகவல் அறிக்கை நகல்களை பரிசோதிக்க இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளனவாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+