பரோலில் வந்து காதலியை மணந்த குண்டுவெடிப்புக் கைதி

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி சர்புதீன், தான் நீண்ட காலமாககாதலித்து வந்த சென்னையைச் சேர்ந்த பெண்ணை பரோலில் விடுதலையாகி வந்து கல்யாணம் செய்து கொண்டார்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர் சர்புதீன். கோவை வின்சென்ட் தெருவைச்சேர்ந்த இவர், குண்டு வெடிப்பு வழக்கில் கைதாவதற்கு முன்பு சென்னையைச் சேர்ந்த சுபைதா என்ற பெண்ணை காதலித்துவந்தார்.

சிறைக்குச் சென்ற பின்னரும் இவர்களது காதல் தொடர்ந்தது. அவ்வப்போது சிறைக்கு வந்து சர்புதீனை சந்தித்து வந்தார் சுபைதா.இந்த நிலையில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் முடிவு செய்தனர்.

இதையடுத்து தனி நீதிமன்றத்தில் திருமணத்திற்கு அனுமதி கோரி இரு தரப்பினரும் மனு செய்தனர். அந்த மனுவை நீதிமன்றம்ஏற்றுக் கொண்டது.

இதைத் தொடர்ந்து சனிக்கிழமை காலை சர்புதீன் பரோலில் விடுவிக்கப்பட்டார். காலை 8 மணிக்கு பலத்த போலீஸ் காவலுடன்அவரது வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு காலை 9 மணியளவில் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர்மாலை 6 மணியளவில் மீண்டும் சர்புதீன் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+