சன், ஜெயா டிவி பார்க்காதீங்க: விஜய்காந்த்

Subscribe to Oneindia Tamil

கும்மிடிப்பூண்டி:

இரண்டு கட்சியினர் (அதிமுக, திமுக) டிவிக்களை (ஜெயா, சன்) நடத்துகிறார்கள். அதில் ஒருவரை ஒருவர் குறை சொல்கிறார்கள்.அதனால் தயவு செய்து டிவியில் செய்தியை பார்க்காதீங்க. சினிமா நிகழ்ச்சி, நாடகம் பார்த்துட்டு டிவியை ஆப் செய்துவிடுங்கள்என்று தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவர் விஜய்காந்த் கூறினார்.

கும்மிடிப்பூண்டியையொட்டி கிராமங்களில் பிரச்சாரம் செய்த விஜய்காந்த் ஆரம்பாக்கம் காவல் நிலையம் எதிரே பேசுகையில்,

நான் அரசியலை விட்டு ஒதுங்கிப் போனாலும். தெய்வம் ஒதுங்க விட மாட்டேங்குது. நீ மக்களிடையே போ என்றுதள்ளிவிட்டது. மதுரையில் மாநாடு நடத்தப் போகும்போது கூட என்னிடம் பணமில்லை.

அதை மனைவியிடம் கூறினேன். அவர் தான் தைரியமாக நிலத்தை விற்கச் சொன்னார். சரியென்று நிலத்தை விற்றேன். நான்எப்படி காலத்தை ஓட்டுகிறேன், எப்படி காலம் கடத்துகிறேன் என்று எனக்குத் தெரியாது.

ஆனால், எனது கல்யாண மண்டபத்தை இடிக்கனும் என சிலர் கற்பனை செய்துகிட்டு இருக்காங்க. இடித்தால் இடிக்கட்டும்.என்னை அரசியலுக்கு வர விடக் கூடாது, மக்களை சந்திக்க விடக் கூடாது என்று சிலர் ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார்கள்.

என் சொத்து போனது குறித்தெல்லாம் எனக்குக் கவலையில்லை. என் மனைவி எனக்கு தெய்வம் மாதிரி. கணவனே கண்ட கண்டதெய்வம்னு சொல்றது தப்பு, மனைவியே கண் கண்ட தெய்வம்னு சொல்றது தான் கரெக்ட்.

இரண்டு தடவை யார், யாருக்கோ ஓட்டு போட்டுட்டு நீங்க எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை. இந்த முறை எனக்கு வாய்ப்புகொடுங்கள். நான் பிழைப்புக்காக அரசியலுக்கு வரவில்லை, உழைப்புக்காக வந்தேன்.

நான் ஜாதியை மதிக்கிறேன். மற்றபடி ஜாதி வேண்டாம். அதை வைத்து அரசியல் செய்யாதீர்கள் என்று தான் சொல்கிறேன். ஜாதிஅரசியல் எனக்குப் பிடிக்காது. ஜாதி அரசியலை கொண்டு வந்தது யார் என்பதை அப்புறம் சொல்கிறேன்.

இரண்டு கட்சியினரும் டிவி நடத்துகிறார்கள். அதில் ஒருவரை ஒருவர் குறை சொல்கிறார்கள். அதனால் தயவு செய்து டிவியில்செய்தியை பார்க்காதீங்க. சினிமா நிகழ்ச்சி, நாடகம் பார்த்துட்டு டிவியை ஆப் செய்துவிடுங்கள்.

நான் டிவியில் செய்திகள் பார்த்து 2 மாதம் ஆகிறது. செய்திகளைப் பார்க்க வேண்டுமானால் பேப்பர் படியுங்கள் என்றார்விஜய்காந்த்.

கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய பல கட்டடங்கள் இடிபட உள்ளன. அதில் விஜய்காந்தின் கல்யாணமண்டபத்தின் படிக்கட்டு உள்பட சிறிய பகுதியையும் இடிக்கத் திட்டமிட்டுள்ளது தேசிய நெடுஞ்சாலைத்துறை.

நாட்டுக்காக தன்னையே அர்ப்பணிப்பாதக் அடிக்குரலில் சினிமா வசனம் பேசும் விஜய்காந்த், சில சென்ட் நிலத்தை நாட்டுக்காகவிட்டுத் தர ரொம்பவே மனமொடிந்து போவது ஏனோ தெரியவில்லையே..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+