அதிகாரிகளை தண்டிக்க வீரமணி, திருமா கோரிக்கை
சென்னை:
எம்.ஜி.ஆர் நகர் சம்பவத்திற்குக் காரணமான, உண்மையான குற்றவாளிகளை கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று திராவிடகழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இத்தனை ஆயிரம் மக்களை, அதுவும் சென்னையில் விட்டு விட்டு கன மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில், ஒரேகட்டடத்தில் கூடி விட விட்டிருக்கலாமா அதிகாரிகள்? காவல்துறையினர் தக்க பாதுகாப்புடன் செயல்பட்டிருந்தால் இதைதவிர்த்திருக்கலாம்.
அரசு அதிகாரிகள் வீடுகளுக்கே நேரில் சென்று அந்த உதவிகளை அளித்திருந்தால் எந்த சிக்கலும் ஏற்பட்டிருக்காதே.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது முதலில் நடவடிக்கை எடுப்பதே சரியான செயலாக இருக்க முடியும்.
நீதி விசாரணைகள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தப்பட்டதாக வரலாறே கிடையாது. எனவே பொருந்தாத காரணங்களைத் தேடிக்கொண்டிருப்பதை விட இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்கும் வகையில், உண்மையமானகுற்றவாளிகளைக் கைது செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் வீரமணி.
உண்மை கண்டறியும் குழு: திருமா
சென்னை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் 42 பேர் பலியான சம்பவம் தொடர்பாக உண்மை கண்டறியும் குழு அமைக்கப்படும் எனவிடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நெரிசலில் சிக்கி உயிரிழந்த எம்.ஜி.ஆர். நகர், அன்னை சத்யா நகர் ஆகிய பகுதிகளைச்சேர்ந்த 20 பேரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினேன். 3 ரேஷன் கடைகளில் உள்ள கார்டுகளுக்கு ஒரே இடத்தில்டோக்கன் வழங்கியுள்ளனர்.
இது மிகப் பெரும் தவறு. இதன் காரணமாகவே இத்தனை உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.இந்தப் பகுதியில் 6,000 பேருக்கு ஒரு ரேஷன் கடைதான் உள்ளது. இதுவும் ஒரு மிகப் பெரிய குளறுபடியாகும். 500கார்டுகளுக்கு ஒரு கடை என்று இருக்க வேண்டும்.
எனவே கவனக்குறைவாக இருந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக உண்மைகண்டறியும் குழுவை அமைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications