எம்.ஜி.ஆர் நகரில் மீண்டும் நிவாரணம் வழங்கும் பணி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

42 உயிர்களைப் பலி வாங்கிய எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் பலத்த போலீஸ் காவலுடன், மீண்டும் நிவாரணம் வழங்கும் பணிஇன்று தொடங்கியது.

கிண்டி-மாம்பலம் வட்டத்திற்குட்பட்ட எம்.ஜி.ஆர். நகர், அன்னை சத்யா நகர் உள்ளிட்ட சில பகுதிகளைச் சேர்ந்த 5,600 பேருக்குஇன்னும் நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை. அந்தப் பணி தொடங்கவிருந்த நிலையில்தான் அசம்பாவிதம் ஏற்பட்டு 42பேர் பரிதாபமாக இறந்தனர்.

இந் நிலையில் கொடுக்கப்படாமல் விடுபட்ட அந்த மக்களுக்கு இன்று நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. இதற்காக மொத்தம்22 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு நவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

ஒரு மையத்திற்கு 200 முதல் 300 பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டு, மிகுந்த போலீஸ் காவலுடன் நிவாரண உதவிகள்வழங்கப்பட்டன. பொதுமக்களும் படு நிதானமாகவும், பொறுமையாகவும் வரிசையில் நின்று பொருட்களையும், ரூ. 2,000பணத்தையும் பெற்றுச் சென்றனர்.

இன்று வழங்கப்பட்டதைப் போல பலத்த போலீஸ் பாதுகாப்பும், அதிக அளவிலான மையங்களும் முன்பேஅமைக்கப்பட்டிருந்தால், 42 உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம் என்று பொதுமக்கள் ஏக்கப் பெருமூச்சுடன் முனுமுனுத்தபடிசென்றதைப் பார்க்க முடிந்தது.

இப்போதாவது அரசுக்கும் போலீசுக்கும் புத்தி வந்ததே என்று கூறியபடி சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+