காங். தலைவர் மீது பயங்கர தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மத்திய சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீது அடையாளம் தெரியாத கும்பல் பயங்கரத் தாக்குதல் நடத்தியது.
மத்திய சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருப்பவர் தண்டபாணி. அமைந்தகரை மார்க்கெட் பகுதியில் இவர்வசித்து வருகிறார். இவர், வெள்ளிக்கிழமை இரவு புல்லாரெட்டி அவென்யூ பகுதியில் சில ஆவணங்களை ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டு வீடு திரும்பினார்.அப்போது அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது. தங்களது கைகளில் இருந்த கட்டைகளால்தண்டபாணியை அவர்கள் சரமாரியாகத் தாக்கினர். இதில் தண்டபாணிக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
மயங்கி கீழே விழுந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். தாக்குதல் நடத்தியவர்கள்அங்கிருந்து ஆட்டோ மூலம் தப்பி விட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தண்டபாணி புகார் கொடுத்துள்ளார். உட்கட்சி மோதல் தொடர்பாக தண்டபாணிதாக்கப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications