மங்கோலியாவில் முக்கிய சாலைக்கு மகாத்மா பெயர்
டெல்லி:
மங்கோலியாவில் 50ம் ஆண்டு சுமூக உறவுகள் விழாவை முன்னிட்டு அங்குள்ள முக்கிய சாலைக்கு மகாத்மா காந்தியின் பெயரைசூட்டியுள்ளனர்.
மங்கோலியாவில் உள்ள ஒரு முக்கிய சாலைக்கு காந்தியின் பெயரை சூட்டியது போல் டெல்லி விமான நிலையம் செல்லும்சாலைக்கு உலான்பாதர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நாளை நடக்கும் விழாவில் மங்கோலிய வெளியுறவுத்துறை அமைச்சர்முன்க் ஆர்ஜில் மற்றும் டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்ஷித் ஆகியோர் கலந்து கொண்டு இதை திறந்து வைக்கிறார்கள்.இது தொடர்பாக இரு நாட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர்களும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பறிமாறிக் கொண்டனர்.
மங்கோலிய நாட்டு ஜனாதிபதி நம்பார் இக்பயாருக்கு, இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் அனுப்பிய வாழ்த்து செய்தியில், இதன்மூலம், இந்தியா-மங்கோலியா இடையே உள்ள சுமூக உறவு மேம்பட்டு மேலும் வளரும் என்று தாம் நம்புவதாக கூறியுள்ளார்.
இதே போல் பிரதமர் மன்மோகன் சிங், இந்தியா-மங்கோலியா நாடுகளுக்குள்ள உறவு வளர்ந்து எதிர்காலத்தில் ஒரு உயர்ந்தஇடத்தை வரலாற்றில் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து மங்கோலிய நாட்டு ஜனாதிபதி கூறும் போது, இந்தியா, மங்கோலிய நாட்டு விடுதலைக்கு பெரும் பங்காற்றியுள்ளது.மங்கோலிய நாட்டை உலக நாடுகள் அளவில் பங்கு பெறச் செய்ததன் மூலம் இந்தியாவிற்கு மங்கோலியாகடமைப்பட்டிருக்கிறது என்றார்.
இதே போல் மங்கோலிய பிரதமர் கூறுகையில், இதன் மூலம் இரு நாடுகளுக்கிடையே சுமூக உறுவு உறுதிபடுவதற்கும்வளர்வதற்கும் வழி வகுத்துள்ளது. மேலும் இந்த உறவு தகவல் தொழில் நுட்பம் மற்றம் கல்வி கலாச்சாரத் துறையில் இருநாடுகளும் வளர்ச்சி பெற உதவியாக இருக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications