ரூ.3.87 கோடியில் அரசு சாதனை விளம்பரம்!
சென்னை:
வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அரசுக்கு மக்கள் சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.
சென்னை எம்.ஜி.ஆர். நகரில் கூட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக, அதிமுக அரசுக்கு கண்டனம்தெரிவித்து திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் சென்னையில் பொதுக் கூட்டம் நடந்தது.இதில் கருணாநிதி பேசுகையில், அதிமுக அரசைக் குற்றம் சாட்டிப் பேச நான் இங்கே வரவில்லை. மக்களிடம் ஒரே ஒருகோரிக்கையை மட்டும் இந்தக் கூட்டத்தின் வாயிலாக வைக்கிறேன். வருகிற தேர்தலில் சரியான பாடம் கற்பியுங்கள், எம்.ஜி.ஆர்.நகர் மக்களுக்கு நீதி கிடைக்க வழி செய்யுங்கள்.
எம்.ஜி.ஆர். நகர் சம்பவத்திற்குப் பின்னும் கூட அரசு சரியான பாடம் கற்றுக் கொள்ளவில்லை. எதிர்க்கட்சிகள் மீது அவதூறுகூறுவதும், பழி சுமத்துவதுமாக இருக்கிறது. இந்த அரசு திருந்தாது.
மாநில அரசுடன் நாங்கள் ஒத்துழைக்கத் தயாராகவே இருக்கிறோம். இந்த அசம்பாவிதச் சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள்தான்காரணம் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படுமானால், அதற்கு மக்கள் கொடுக்கும் எந்தத் தண்டனையையும் ஏற்றுக் கொள்ளநாங்கள் தயார்.
அனைத்துக் கட்சிக் குழுக்களை அமையுங்கள் என்று நாங்கள் சுனாமி தாக்கிய நாளிலிருந்து கூறி வருகிறோம். ஆனால், அதில்அரசுக்கு என்ன சிரமம் இருக்கிறது என்பது புரியவில்லை. நிதியை சரியாக செலவழியுங்கள் என்று கூறினால் இந்த அரசுக்குக்கோபம் வருகிறது.
ஆனால், ரூ. 3.87 கோடி செலவு செய்து, அமெரிக்காவிலிருந்து வெளியாகும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கையில், தனதுஅரசின் சாதனைகளை பறை சாற்றி விளம்பரம் செய்து மக்கள் பணத்தை வீணடித்துள்ளது அதிமுக அரசு.
அதிமுக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பேசிமுடிவெடுக்கப்படும் என்றார் கருணாநிதி.
இக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாமக தலைவர் ஜி.கே.மணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரதராஜன், தா.பாண்டியன் உள்ளிட்டோரும் பேசினர்.












Click it and Unblock the Notifications