மெரீனாவில் மெழுகுவர்த்திகளுடன் கண்ணீர் அஞ்சலி: நாகையில் சுனாமி பூங்கா திறப்பு

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டிணம்:

நாகப்பட்டிணத்தில் சுனாமியால் உயிர் நீத்தவர்கள் நினைவாக உருவாக்கப்பட்டுள்ள பூங்காவை மாவட்ட கலெக்டர்ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பூங்காவில் உயிரிழந்தவர்கள் நினைவாக நினைவுத் தூண்வைக்கப்பட்டுள்ளது.

சுனாமிக்கு பெற்றோரை இழந்து அனாதரவான குழந்தைகள் நினைவுத் தூணில் மலர் வளையம் வைத்தனர். அப்போது பலகுழந்தைகளும் உடைந்தது அழுதது அங்கிருந்த அனைவரின் கண்களையும் கலங்கச் செய்தது.

சுனாமி குறித்த 3 புத்தகங்களையும் வெளியிட்ட ராதாகிருஷ்ணன், தலைமையில் ஒரு நிமிட மெளன அஞ்சலியும்செலுத்தப்பட்டது.

அங்கு அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூணில் நாகப்பட்டிணம் கடற்படை அலுவலகத்தில் இருந்து சுனாமிக்குப் பின்மீட்கப்பட்ட ஒரு கடிகாரம் பதிக்கப்பட்டுள்ளது. அந்த கடிகாரத்தில் நேரம் காலை 9.17 என்றுள்ளது. அந்த நேரத்தில் தான்நாகப்பட்டிணத்தை சுனாமி தாக்கியது.

இந்தப் பூங்காவில் அலங்கரிக்கப்பட்ட 6,065 மலர்க் கன்றுகளும் உள்ளன. நாகப்பட்டிணத்தில் சுனாமிக்குப் பலியானவர்களின்எண்ணிக்கை 6,065 ஆகும்.

மெரீனாவில் கண்ணீர் அஞ்சலி:

Black Flag
சுனாமி நினைவு தினத்தையொட்டி இன்று சென்னை மெரீனா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலிசெலுத்தினர்.

கைகளில் மெழுகுவர்த்திகளுடன் வந்த பலர் அதை ஏற்றிக் கொண்டு கடலைப் பார்த்தபடி கண்ணீர் விட்டனர். பலர் உடைந்துபோய் கதறி அழுதனர். மேலும் பலர் அமைதியாக கடலை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தனர்.

பெரும்பாலான மீனவர்கள் தங்கள் படகுகளில் கறுப்புத் துணியைக் கட்டியிருந்தனர்.

சென்னையில் அகில இந்திய மீனவர் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது.ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் கைகளில் மெழுகுவர்த்தியுடன் அமைதியாக நடந்து சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+