பெங்களூரில் குழந்தையை கடத்திய தமிழக தம்பதி
பெங்களூர்:
பெங்களூரில் கட்டிட மேஸ்த்திரியின் 9 மாத குழந்தையை திருடிச் சென்ற கணவன், மனைவியை போலீசார் வேலூர் அருகேஉள்ள திருவல்லத்தில் கைது செய்தனர்.
பெங்களூர் கே.ஆர்.புரம் சத்யசாயி லே-அவுட்டில் வசித்து வரும் கட்டிட மேஸ்த்திரி அனுமந்தா. இவரிடம் கடந்த 15நாட்களுக்கு முன்பு சுரேஷ் என்பவர் தனது மனைவி லட்சுமியுடன் வந்து வேலை எதாவது கொடுத்தால் செய்கிறோம் என்றுகூறியுள்ளார். இரக்கப்பட்ட அனுமந்தா கணவன் மனைவி 2 பேருக்கும் வேலை கொடுத்து அவர்கள் தங்குவதற்கும் இடம்கொடுத்தார்.இந்த நிலையில் சம்பவத்தன்று சுரேஷ் மற்றும் அவரது மனைவியும் சேர்ந்து அனுமந்தாவின் 9 வயது குழந்தை சாபண்ணாவைதிருடிச் சென்று விட்டனர். இதனால் கட்டிட மேஸ்த்திரியும் அவரது மனைவியும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது பற்றிஅவர்கள் கே.ஆர். புரம் போலீசில் புகார் கொடுத்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் கணவன், மனைவி 2 பேரும் பொய்யான முகவரி கொடுத்து வேலைக்குசேர்ந்திருப்பது தெரியவந்தது. அதே சமயத்தில் சுரேஷ் பக்கத்து டெலிபோன் பூத்தில் இருந்து வேலூர் மற்றும் தர்மபுரிமாவட்டங்களுக்கு அடிக்கடி பேசியதும் தெரியவந்தது.
போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் சுரேஷ் மற்றும் லட்சுமி ஆகிய 2 பேரும் வேலூர் மாவட்டம் திருவல்லத்தைசேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. உடனடியாக கே.ஆர்.புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர், மற்றும் போலீசார் திருவல்லத்துக்குவிரைந்து சென்று குழந்தையை கடத்தி சென்ற சுரேஷ், லட்சுமியை கைது செய்து குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் தான் குழந்தையைதிருடியதாக ஒப்புக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications