தொடர்கிறது திமுக கவுன்சிலரின் சிறைவாசம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை எம்.ஜி.ஆர் நகரில் 42 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, சென்னை முதன்மை அமர்வுநீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்ட திமுக கவுன்சிலர் தனசேகரனை விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.எம்.ஜி.ஆர். நகரில் வெள்ள நிவாரணம் பெற வந்த மக்களிடையே வதந்திகளை பரப்பியதாக கூறி திமுக கவுன்சிலர் தனசேகரனைபோலீஸார் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட அவர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுசெய்தார்.
அந்த மனுவை விசாரித்த அமர்வு நீதிமன்றம், தனசேகரனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழகஅரசின் சார்பில் இன்று உயர்நீதிமன்ற நீதிபதி சர்தார் சக்காரியா உசேனிடம், அவரது வீட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவைப் பரிசீலித்த நீதிபதி, இதுகுறித்து நீதிமன்றத்தி விரிவான விவாதம் நடத்தலாம் என்று கூறி வரும் திங்கள்கிழமைக்கு(ஜனவரி 2ம் தேதி) விசாரணையை ஒத்திவைத்தார். அதுவரை முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தக்கூடாது என்றும் நீதிபதி தடை விதித்தார்.
இதனால் தனசேகரன் இன்று விடுதலையாகவில்லை.












Click it and Unblock the Notifications