பாதுகாப்பு கேட்கிறார் சதுவேதி சாமியார்
சென்னை:
சதுர்வேதி சாமியார் தனக்கு பாதுகாப்பு கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக உள்துறை செயலாளர் போலீஸ் டிஜிபி ஆகியோர் மீது சதுர்வேதி சாமியார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தமனுவில் கூறியிருப்பதாவது:நான் எம்ஏ பட்டதாரி, வேதம் மற்றும் இந்து தத்துவவியல் பற்றி சொற்பொழிவு ஆற்றி வந்தேன். அதனால் எனக்கு ஏராளமானபக்தர்கள் உருவானார்கள். இந்த நிலையில் என் மீது சுரேஷ் என்பவர் கொடுத்த புகாரை வைத்து 6 வழக்குகளை போலீசார் பதிவுசெய்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
ஆனால் உச்சநீதிமன்றம் என்னை குண்டர் தடுப்பு சட்டத்தில் இருந்து விடுதலை செய்தது. தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்உயர் அதிகாரிகள் மற்றும் சிலர் மிரட்டுகின்றனர். இது குறித்து தமிழக உள்துறை செயலாளருக்கு கடந்த 16ம் தேதி மனுகொடுத்தேன்.
என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் உரிய போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும் என்று தமது மனுவில் கூறியுள்ளார்.
இவர் மீது தொழிலதிபரின் மனைவி, மகளை பலாத்காரம் செய்ததாக செக்ஸ் புகார், சிஷ்யர்களிடம் ஹோமோ செக்ஸ்வைத்தாகவும் புகார்கள் சுமத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications