ஹைதராபாத் சாப்ட்வேர் நிறுவனங்களை தாக்க தீவிரவாதிகள் சதி
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
ஹைதராபாத்தில் உள்ள தகவல் தொழில் நுட்ப நகரத்தை தாக்க தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறைஎச்சரிக்கை விடுத்துள்ளது.
பெங்களூரில் நடந்த விஞ்ஞானிகள் மாநாட்டில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினக். இந் நிலையில் ஹைதராபாத்தில் உள்ளதகவல் தொழில் நுட்ப நிறுவனங்களைத் தாக்க தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டி உள்ளதாக மத்திய உளவுத்துறை மாநில அரசுக்குஎச்சரிக்கை விடுத்துள்ளது.இதைத் தொடர்ந்து ஹைதராபாத் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தகவல் தொழில் நுட்ப நகரத்தை சுற்றி உள்ளபகுதிகளில் உடனடியாக 17 செக்போஸ்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வரும் அனைத்து வாகனங்களையும் போலீசார்சோதனையிட்டு வருகின்றனர்.
ஹைதராபாத்தில் அடுத்த மாதம் அறிவியல் மாநாடும், அகில இந்திய காங்கிரஸ் மாநாடும் நடைபெறுகிறது. அறிவியல்மாநாட்டில் ஜனாதிபதி அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங் பல நாட்டு விஞ்ஞானிகள் கலந்து கொள்கிறார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications