ஏமனில் நிலச்சரிவு: 30 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சானா:
ஏமன் நாட்டின் தலைநகர் சானா அருகே ஏற்பட்ட நிலச் சரிவில் 30 பேர் பலியாயினர்.
கரடு முரடான மலைகள் நிறைந்த இப் பகுதியில் அல்-தபீர் என்ற கிராமத்தில் திடீரென நிலச் சரிவு ஏற்பட்டது. மலையில் இருந்துஉருண்டு வந்த பாறைகளும் மணலும் சுமார் 15 வீடுகளை மூடின.
இதில் அந்த வீடுகளில் இருந்த 30 பேர் உயிரோடு புதைந்து பலியாயினர்.
செளதி அரேபியாவுக்கு மிக அருகில் இருந்தாலும் வளைகுடாவில் மிக மிக வறுமையான நாடுகளில் ஏமனும் ஒன்று என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications