பெங்களூர் பயங்கரம்: கோவை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளை பிடிக்க வேட்டை
சென்னை:
பெங்களூர் தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் தலைமறைவாக இருக்கும், கோவை குண்டுவெடிப்புச்சம்பவத்தில் தொடர்புடைய 12 தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூர் சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை நகரில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நகரைச் சுற்றிலும்,நகருக்குள்ளும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புதிதாக 16 செக் போஸ்டுகள் அமைக்கப்பட்டு வாகனப் பரிசோதனைநடக்கிறது.இரவு பகலாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. விடுதிகளிலும் போலீஸால் சல்லடை போட்டு சோதனை டத்தி வருகின்றனர்.
இந் நிலையில், இந்த நேரத்தில் நீண்ட காலமாக தலைமறைவாக உள்ள கோவை குண்டுவெடிப்புக் கைதிகள் 12 பேரால் எந்தவிதஅசம்பாவிதமும் ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்காக அவர்களைத் தேடும் பணியை போலீஸார் மீண்டும் முடுக்கி விட்டுள்ளனர்.
கோவை குண்டுவெடிப்புச் சம்பவத்திற்குப் பிறகு இவர்கள் தலைமறைவாகி விட்டனர்.
கோவையைச் சேர்ந்த அயூப், டெய்லர் ராஜா, முஜிபுர் ரஹ்மான், நெல்லையைச் சேர்ந்த ரசூல் மைதீன், வாணியம்பாடியைச் சேர்ந்தமுஷ்தாக் அகமது, நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக்,
கேரளாவைச் சேர்ந்த நுகு, குஞ்சு முகம்மது, ஹைதராபாதைச் சேர்ந்த அபு ஹம்சா, பாகிஸ்தானைச் சேர்ந்த அபு உமர் மற்றும்அடையாளம் தெரியாத மேலும் 2 பேர் உள்பட 12 பேர் குறித்த அனைத்து விவரங்களும், புகைப்படங்களும் தமிழகம் முழுவதும்உள்ள காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இவர்களைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் போலீஸார் இறங்கியுள்ளனர். இவர்களில் அபு உமர், அபு ஹம்சா ஆகியஇருவரும் தற்போது சவூதி அரேபியாவில் இருப்பதாகவும் ஒரு தகவல் போலீஸாரிடம் உள்ளது.