போர் வெடிக்கும் அபாயம்: புலிகள் கட்டுப்பாட்டு பகுதியில் தஞ்சமடையும் தமிழர்கள்
கொழும்பு:
இலங்கையில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் வட-கிழக்கில் உள்ள தமிழர்கள் குடும்பம் குடும்பமாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தஞ்சம் அடைய ஆரம்பித்துள்ளனர்.
இலங்கையில் அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் போர் நிறுத்தம்அமலில் இருந்து வருகிறது. சமீபத்தில் ராஜபக்ஷே அதிபர் ஆனதில் இருந்து அங்கு பதட்டம் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே ஆங்காங்கே மோதல்கள் நடைபெற்று வருகின்றன. சமரசபேச்சு வார்த்தை தொடங்குவதிலும் முட்டுக்கட்டை நீடிக்கிறது.
போர் நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டு எந்த நேரத்திலும் மிகப்பெரிய அளவில் போர் வெடிக்கும் அபாயம் நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது. கொழும்பில் தமிழர்களின் வீடுகளில் அர்த்தராத்திரியில் நுழைந்து சோதனை என்ற பெயரில் மிரட்டலில்ஈடுபட்டு 900 பேரைக் கைது செய்தது இலங்கை ராணுவம்.
மேலும் யாழ்ப்பாணத்தில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலும், இதர பகுதிகளிலும் தமிழர்களின் வீடுகளில்ராணுவத்தினர் சோதனையில் ஈடுபட்டு கெடுபிடி செய்து வருகின்றனர்.
இதனால் அங்கு வசிக்கும் தமிழர்கள் குடும்பம் குடும்பமாக வெளியேறத் துவங்கியுள்ளனர். இதுவரை பல நூறு குடும்பங்கள்வெறியேறிவிட்டன. மற்ற பகுதிகளில் இருந்தும் தமிழர்கள் வெறியேறி வருகிறார்கள்.
இவர்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.