மீண்டும் சென்னை வருகிறார் டாண்டன்
சென்னை:
தலைமைத் தேர்தல் ஆணையர் பி.பி. டாண்டன் மீண்டும் வருகிற 17ம் தேதி சென்னை வருகிறார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் மே மாத வாக்கில் நடைபெறும் எனத் தெரிகிறது. இதுதொடர்பான பணிகளில் தேர்தல் ஆணையம்தீவிரமாக இறங்கியுள்ளது.தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக தலைமைத் தேர்தல் ஆணையர் டாண்டன், கடந்த 9ம் தேதி கோவை வந்தார்.அங்கு ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய டாண்டன், பின்னர் மதுரையிலும், தொடர்ந்து சென்னையிலும்ஆலோசனையில் ஈடுபட்டார்.
தொடர்ந்து 3 வருடமாக ஒரே இடத்தில் பதவியில் இருக்கும் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளை கூண்டோடு இடமாற்றம்செய்ய உத்தரவிட்டார். இதனால் தமிழக அரசு கலகலத்துப் போயுள்ளது.
இந் நிலையில் டெல்லி திரும்பிய டாண்டன் மீண்டும் வரும் 17ம் தேதி சென்னை வருகிறார். முதலில் 16ம் தேதி புதுவைக்குசெல்லும் டாண்டன் அங்கு அதிகாரிகளுடன் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். அதன் பின்னர்காரைக்காலுக்கும் அவர் செல்கிறார்.
புதுவை பயணத்தை முடித்து விட்டு 17ம் தேதி சென்னை வரும் டாண்டன் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா உள்ளிட்டஅதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த முறை தேர்தலில் யாரும் அத்துமீறலில் ஈடுபட்டுவிடாமல் தடுக்க மிகத் தீவிரமாக இருக்கிறார் டாண்டன். இதனால் பணபலம், அதிகார பலத்தை நம்பியிருந்த தரப்பு ஆடிப் போயுள்ளது.
50,000 வாக்குச் சாவடிகள்:
இதற்கிடையே தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு மாநிலம் முழுவதும் 50,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என தலைமைத்தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் தற்போது 45,000 வாக்குச் சாவடிகள் உள்ளன. 1,500பேருக்கு ஒரு வாக்குச் சாவடி என்ற விகிதத்தில் தற்போது வாக்குச் சாவடிகள் உள்ளன. இது 1,200 பேருக்கு ஒரு சாவடி எனமாற்றியமைக்கப்படும்.
இதன் மூலம் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 50,000க்கும் மேலாக அதிகரிக்கும்.
வரும் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். தங்களது பெயர்கள் சரியாகவந்திருக்கிறதா என்பதை வாக்காளர்கள் சரி பார்த்து விண்ணப்பிக்க ஒரு வார கால அவகாசம் அளிக்கப்படும்.
ஜனவரி 23ம் தேதிக்குப் பிறகு புகைப்பட அடையாள அட்டை வழங்கும் பணி தீவிரமாக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications