சாகித்ய அகாடமி விருதை நிராகரித்தார் அருந்ததி ராய்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மத்திய அரசு வழங்கியுள்ள சாகித்ய அகாடமி விருதை பிரபல எழுத்தாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான அருந்ததி ராய்நிராகரித்துள்ளார்.
அருந்ததி ராய், இந்தியாவின் முன்னணி எழுத்தாளராக மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் விளங்குகிறார். நர்மதாஅணைத் திட்டத்தை கடுமையாக எதிர்த்து வரும் அருந்ததி ராய் அது தொடர்பான போராட்டங்களில் பங்கு கொண்டு வருகிறார்.இந்த நிலையில் அருந்ததி ராய்க்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுவதாக சாகித்ய அகாடமி அமைப்பு அறிவித்துள்ளது.ஆனால் தான் விருதைப் பெறப் போவதில்லை என்று அருந்ததி ராய் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு சுற்றுச்சூழல் விரோத அரசாகவும், பொருளாதார சீர்குலைவுத் திட்டங்களை அமல்படுத்தி வருவதாகவும், எனவேமத்திய அரசின் கீழ் உள்ள சாகித்ய அகாடமியின் விருதை தான் பெறப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அருந்ததி ராயை சமாதானப்படுத்தி விருதைப் பெற வைக்க சாகித்ய அகாடமி நிறுவனம் முயற்சி மேற்கொண்டுள்ளது. அருந்ததிராய் பிரபல புக்கர் விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications