மார்ச் 1ம் தேதி நாடு முழுவதும் ரயில்கள் ஓடாது
Subscribe to Oneindia Tamil
மதுரை:
வரும் மார்ச் 1ம் தேதி நாடு முழுவதும் ரயில்கள் ஓடாது என்று தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் தலைவர் ராஜா ஸ்ரீதர்தெரிவித்துள்ளார்.மத்திய அரசு ஊழியர்களுக்கு 6வது சம்பள கமிஷனை அமைத்து புதிய விகிதப்படி சம்பளம் வழங்க வேண்டும். 5வது சம்பளகமிஷனில் எழுந்த முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உட்பட 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்தியஅளவில் மார்ச் 1 முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட மத்திய அரசு ஊழியர்கள், அதிகாரிகள் கூட்டமைப்பினர் முடிவுசெய்துள்ளனர்.
ரயில்வே, பாதுகாப்பு, வருமான வரி, தபால் உட்பட மத்திய அரசு துறைகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் இதில் பங்கேற்கின்றன.ரயில்வே தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
எனவே மார்ச் 1ம் தேதி மத்திய ஊழியர்கள் நடத்தவுள்ள ஸ்டிரைக்கை முன்னிட்டு ரயில்கள் ஓடாது என தெற்கு ரயில்வே மஸ்தூர்யூனியன் தலைவர் ராஜா ஸ்ரீதர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications