For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செக்ஸ் தொல்லை- சுதாகரனை காப்பாற்ற போலீஸ் முயற்சி: ப்ரியா புகார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Priya Nairமுதல்வர் ஜெயலலிதாவின் மாஜி வளர்ப்பு மகன் சுதாகரன் மீது பாலியல் புகார் கூறிய கேரளாவைச் சேர்ந்த பெண் தயாரிப்பாளர்ப்ரியா நாயர் மிகப் பெரிய மோசடிப் பேர்வழி என்று போலீஸார் கூறுகிறார்கள்.

ஆனால், தவறு செய்த வளர்ப்பு மகன் சுதாகரனைக் காப்பாற்ற போலீசார் முயல்வதாக ப்ரியா நாயர் குற்றம் சாட்டியுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த ப்ரியா நாயர் சமீபத்தில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜை சந்தித்து ஒரு புகார்கொடுத்தார். அதில்,

சுதாகரன் தன்னுடன் தொலைபேசியில் ஆபாசமாக பேசி வருவதாகவும், பாலியல்ரீதியாக தன்னை இழிவுபடுத்தும் வகையில்அவர் மிரட்டி வருவதாகவும் கூறியிருந்தார். சுகாகரன் தன்னுடன் ஒரு நாள் நள்ளிரவுக்கு மேல் சுமார் 5 மணி நேரம் ஆபாசமாகபேசியதை டேப் செய்து வைத்துள்ளதாகவும் தனது புகாரில் கூறியிருந்தார்.

மாஜி மகன் மீது ஏகப்பட்ட வழக்குகள் உள்ள நிலுவையில் உள்ள நிலையில் இந்த பெண் புகாரும் சேர்ந்து பெரும் பரபரப்பைஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரிக்க மயிலாப்பூர் துணை ஆணையருக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த விசாரணையின்போது தங்களுக்கு ப்ரியா குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தாக போலீஸ் தரப்பு கூறுகிறது.

போலீஸ் தரப்பு சொல்லுவது என்ன?

ப்ரியா நாயரின் பிரதான வேலையே மற்றவர்களிடம் மோசடி செய்து பணம் பறிப்பதுதான். உண்மையில் அவர் சினிமாதயாரிப்பாளரே அல்ல. தயாரிப்பாளர் என்ற போர்வையில் அவர் பல தில்லாலங்கடி வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

புகாரில் ப்ரியா தனது வயதை 25 என்று குறிப்பிட்டுள்ளார். உண்மையில் அவரது வயது 35. தனது இளமைத் தோற்றத்தைப்பயன்படுத்தி வயதைக் குறைத்துக் கூறி வந்துள்ளார்.

ப்ரியாவின் கணவராக தற்போது கூறப்படும் சத்யா, அவருக்கு 4வது கணவராவார்.

முதல் 3 கணவர்களுடனும் சிறிது காலம் குடும்பம் நடத்திய பிறகு அவர்களை விட்டு விலகி விட்டார் ப்ரியா.

தனக்கு குழந்தை இல்லை என்று ப்ரியா புகாரில் கூறியுள்ளார். ஆனால் அவருக்கு 10 வயதில் ஒரு குழந்தை உள்ளது. ப்ரியாவின்மோசடி வேலைகளில் 4வது கணவரான சத்யா உற்ற துணையாக இருந்து வந்துள்ளார்.

ப்ரியா இந்த மோசடித் தொழிலில் குதித்ததற்குப் பின்னணிக் கதையும் உள்ளது. சொகுசாக, ஆடம்பரமாக வாழ வேண்டும் என்றஎண்ணம் கொண்ட ப்ரியா, சில வருடங்களுக்கு முன்பு வெளிநாடு சென்றுள்ளார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி அங்கு பணம்கொட்டும் வேலை கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த ப்ரியா சொந்த ஊர் திரும்பினார்.

அப்போதுதான் தனது அழகையும், புத்திசாலித்தனத்தையும் முதலீடாகக் கொண்டு இந்தியாவிலேயே மோசடித் தொழிலில்ஈடுபட்டு பெரிய ஆளாகி விட வேண்டும் என்று முடிவெடுத்தார். தனது தொழிலுக்கு அவர் தேர்ந்தெடுத்த ஊர் சென்னை.

சென்னைக்கு தனது நான்காவது கணவர் சத்யாவுடன் வந்த ப்ரியா நாயர், திரைப்படத் தயாரிப்பாளர் என்ற அவதாரம் எடுத்தார்.ஒரு அலுவலகத்தைப் போட்டார். தனது கெட்டப்பையும் மாற்றினார். மற்றவர்கள் கண்களுக்கு தான் ஒரு தயாரிப்பாளர் என்றதோரணை வரும் வகையில் நடந்து கொள்ள ஆரம்பித்தார்.

தயாரிப்பாளர் என்ற போர்வையில் பல அப்பாவி இளைஞர்களிடம் பண மோசடியை ஆரம்பித்துள்ளார். அவரது வலையில்சிக்கிய முதல் நபரிடம் நடிகர் விஜய்யின் கால்ஷீட் வாங்கித் தருவதாக கூறி பணத்தைக் கறந்துள்ளார்.

பணத்தை வாங்கிய பின்னர் அந்த நபரை அலைய விட்டுள்ளார். ஏமாந்ததை உணர்ந்த அந்த நபர், போலீஸில் புகார்கொடுத்துள்ளார். இதுதான் ப்ரியா மீது பதிவான முதல் வழக்கு. (அப்போதே ப்ரியா மீது போலீஸ் நடவடிக்கை எடுக்காததுஏனோ?)

அந்த மோசடி குறித்த விசாரணை பெரிய அளவில் நடத்தப்படாததால் (ஏன்), தெம்பாகிப் போன ப்ரியா தனது மோசடிநாடகங்களை தொடர்ந்து அரங்கேற்றத் தொடங்கினார். செங்கல்பட்டைச் சேர்ந்த லோகேஷ் என்ற வாலிபர் (இவர் மெரைன்என்ஜீனியரிங் படித்தவர்) ஹீரோ வாய்ப்புக்காக ப்ரியாவை அணுகியுள்ளார். அவரிடம் ரூ. 5 லட்சம் பணத்தை வாங்கிய ப்ரியா,எப்படியாவது உன்னை ஹீரோவாக்கி விடுகிறேன் என்று உறுதியளித்துள்ளார்.

ஹீரோ கனவில் மூழ்கியிருந்த லோகேஷ் விரைவிலேயே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். ப்ரியாவை அணுகி பணத்தைத்திருப்பிக் கேட்டார். ஆனால் அவருக்கு ப்ரியா கொடுத்ததோ அல்வாதான்.

இதைத் தொடர்ந்து மன்னார்குடியைச் சேர்ந்த செந்தில், ராஜகோபால் உள்ளிட்ட 3 பேரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி தலா ரூ. 50,000 பணத்தை வாங்கி ஏப்பம் விட்டுள்ளார்.

இந் நிலையில் தான் குடியிருந்து வந்த அண்ணா நகர் வீட்டை திடீரென ப்ரியா காலி செய்து விட்டு விருகம்பாக்கத்தில்குடியேறியுள்ளார். அண்ணா நகர் வீட்டிற்கு பல மாதங்களாக அவர் வாடகை தரவில்லை என்று தெரிகிறது. இந் நிலையில்திடீரென அங்கிருந்து குடும்பத்தோடு எஸ்கேப் ஆகி விட்டார்.

இந் நிலையில் தயாரிப்பாளர் வேடத்திற்கு கொஞ்சமாவது நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நண்பனின்காதலி என்ற படத்திற்கு பூஜை போட்டுள்ளார். படத்தின் நாயகனாக அபினய் மற்றும் நாயகியாக அபர்ணாவைப் புக்செய்துள்ளார்.

ரஞ்சித்குமார் என்பவர் படத்தை இயக்குவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்தப் படத்திற்காக அபர்ணாவிடம் கொஞ்சம் பணத்தையும் ப்ரியா கேட்டுள்ளார். அவரும் தருவதாக உறுதியளித்திருந்தார்என்று கூறப்படுகிறது. பூஜை போட்டதோடு சரி, ஒரு நாள் ஷூட்டிங் கூட நடக்கவில்லை. இதனால் வெறுத்துப் போனரஞ்சித்குமார் தனது அலுவலகத்தைப் பூட்டி விட்டுப் போய் விட்டார்

இதனால் கடுப்பான ப்ரியா, அந்த அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை எல்லாம் எடுத்துச் சென்றுவிட்டார். மேலும், ரஞ்சித்குமார் மீது போலீஸிலும் புகார் கொடுத்தார்.

பிரச்சினை குறித்து அறிந்த ஹீரோ அபினயின் தாயார், தானே படத்தை வாங்குவதாக கூறி அதுவரை ஆன செலவாக ரூ. 4லட்சத்தை ப்ரியாவிடம் கொடுத்து பட உரிமையை வாங்கினார். ஆனால் இதே படத்தை வேறு சிலரிடமும் மோசடியாக ப்ரியாவிற்றது அபினயின் தாயாருக்குத் தெரிய வந்தது.

இதையடுத்து ப்ரியாவுக்கு தான் கொடுத்த காசோலையை நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட வங்கிக்குத் தெரிவித்துள்ளார். அவர்களும்காசோலையை நிறுத்தி விட்டனர்.

இதை அறிந்த ப்ரியா அடியாட்களுடன் அபினயின் வீட்டுக்குச் சென்று அவரது தாயாரை அடித்து உதைத்துள்ளார்.இதுதொடர்பாக திரைப்படத் தயாரிப்பாளர் கவுன்சிலில் அபினயின் தாயார் புகார் கொடுத்துள்ளார்.

இந் நிலையில்தான் சுதாகரன் மீது புகார் கொடுத்துள்ளார் ப்ரியா. இதில் வேடிக்கை என்னவென்றால், இதுவரை நடந்த அனைத்துசம்பவங்களிலும் சுதாகரன் பெயரை அவர் பயன்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

சுதாகரனை தனக்குத் தெரியும். நான் சொன்னால் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்று கூறியே ப்ரியாவும், அவரதுநான்காவது கணவரும் சம்பந்தப்பட்டவர்களை மிரட்டிப் பணிய வைத்துள்ளனர்.

இவ்வாறு சுதாகரனுக்கு கிளீன் சிட் கொடுத்து, ப்ரியா மீதே எல்லா புகார்களையும் சுமத்துகிறது காவல் துறை.

ஆனால், பெரிய இடத்துப் பிள்ளையான சுதாகரன் மீது ப்ரியா ஏன் திடீரென புகார் கொடுத்தார் என்பதற்கு மட்டும் போலீசிடம்பதில் இல்லை.

அதே நேரத்தில் ப்ரியா நாயர், பல மலையாளப் படங்களில் ஆபாச வேடங்களில் நடித்துள்ளார் என்றும், சில ஏ ரக படங்களில்முக்கால் நிர்வாணமாக வந்து போயுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தகவல் பரப்பப்பபடுகிறது. அதற்கான ஆதாரங்களைபோலீஸார் திரட்டி வருகின்றனராம்.

இதற்கிடையே, ப்ரியா நாயர் மீது சுதாகரன் தரப்பிலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரையும் போலீஸார் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ப்ரியா நாயர் பரபரப்பு பேட்டி:

இந் நிலையில் இன்று ப்ரியா நாயர் அளித்த பேட்டியில், தவறு செய்த வளர்ப்பு மகன் சுதாகரனைக் காப்பாற்ற போலீசார்முயல்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் கூறுகையில்,

திருவண்ணாமலையில் சாமி கும்பிட நானும் கணவரும் போனபோது தான் சுதாகரனை சந்தித்தேன். அவர் வந்து பேசினார். நீரொம்ப ஷார்ப்பா பேசுற.. உன் பெயர் ரொம்ப நல்லா இருக்கு.. உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்றார். பின்னர் போன்நம்பரை வாங்கிக் கொண்டவர், தினமும் இரவில் போன் செய்ய ஆரம்பித்தார்.

என் வாழ்க்கையில் நான் விரும்பியதை நான் அடையாமல் விட்டதில்லை என்பார். என் அங்கங்களை மிக ஆபாசமாக விமர்சிக்கஆராம்பித்தார். மனைவியை விட்டு பிரிந்திருக்கிறேன். என் ராசியும் உன் ராசியும் நல்ல பொருத்தமுள்ளவை. அதன்படி நாம்இருவரும் ஒன்று சேர்ந்தால் நான் விரைவில் முதல்வர் ஆகிவிடுவேன் என்றெல்லாம் பேசி வந்தார்.

யாரோ ஜோதிடர் என்னுடன் சேர்ந்தால் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று சொன்னாராம். இதனால் எனக்கு செக்ஸ் தொல்லைகொடுத்து வந்தார் சுதாகரன். சுதாகரனின் தொல்லை தொடர்ந்ததால் அவரது பேச்சை நாங்கள் ரகசியமாக டேப் செய்யஆரம்பித்தோம்.

என்னிடம் மணிக்கணக்கில் சுதாகரன் ஆபாசமாக பேசியதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. சுதாகரன் கொடுத்த செக்ஸ் டார்ச்சர்குறித்து கமிஷ்னரிடம் புகார் கொடுத்தும் இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முதல்வரின் மாஜி வளர்ப்பு மகன் என்ற செல்வாக்கும், பண பலமும், ஆள் பலமும், அதிகார பலமும் அவருக்கு உள்ளது. எனக்குஎன்ன நடந்தாலும் சுதாகரன் தான் பொறுப்பு. எனக்க முதல்வர் ஜெயலலிதா தான் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார் ப்ரியா.

சுதாகரன் மீதான தனது புகார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடவும் ப்ரியா நாயர் முடிவு செய்துள்ளார்என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X