தயாநிதியை புறக்கணித்த அதிமுக ஆதரவு காங்.
சென்னை:
சென்னையில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின்தலைமையில் நடந்த மத்திய அரசு விழாவில் தொகுதி காங்கிரஸ்எம்.எல்.ஏ.வின் பெயர் இடம்பெறாததால், காங்கிரஸ் கட்சியினர் விழாவைப் புறக்கணித்தனர்.
சென்னை பூக்கடை பகுதியில் உள்ள தபால் நிலையம் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. மிகவும் பழமையான இந்ததபால் நிலையத்திற்குப் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் அடிக்கல் நாட்டி, தபால்காரர்களுக்கு புதிய சைக்கிளையும்வழங்கினார்.
இந் நிகழ்ச்சி நடந்த தொகுதி பூங்கா நகர் ஆகும். இத்தொகுதியின் எம்.எல்.ஏ. விநாயகமூர்த்தி ஆவார். காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த இவர் முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவாளர். சமீபத்தில் ஜெயலலிதாவை பொதுக் கூட்டத்தில் வாழ்த்திப் பேசிய இவரைகாங்கிரஸ் கட்சியினர் கட்சி அலுவலகத்தில் வைத்து அடித்து, உதைத்து வேட்டியைக் கிழித்தனர்.
விநாயகமூர்த்தியின் அதிமுக ஆதரவு காரணமாக விழா அழைப்பிதழில் அவரது பெயரை திமுக தரப்பு தவிர்த்தது. அதேபோலமாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் மணிபால் பெயரும் இடம் பெறவில்லை.
இதனால் அந்தத் தொகுதி காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியது. கூட்டணிக் கட்சியாக இருந்தும் காங்கிரஸ்கட்சிக்காரர்களை மதிக்காமல் விழா நடத்துவதா என்று கோபமடைந்த விநாயகமூர்த்தி ஆதரவு காங்கிரஸ் பிரமுகர்கள்,நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
இந் நிகழ்ச்சிக்கு சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பலராமன் தலைமை தாங்கினார். ரூ. 45 லட்சம் செலவில் பூக்கடைதபால் நலையம் புதிய பொலிவுடன் கட்டப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications