ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பிப்ரவரி 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, தினகரன், சின்ன எம்ஜிஆர் சுதாகரன் உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பச்சாப்பூரே சமீபத்தில் அப்பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டார்.
புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்டள்ள முனோலி இன்னும் பொறுப்பேற்காமல் உள்ளார். இந் நிலையில் இவ்வழக்கு இன்று பொறுப்பு நீதிபதியான கிருஷ்ணப்பா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை வரும் பிப்ரவரி 25ம் தேதிக்கு தள்ளிவைத்து கிருஷ்ணப்பா உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications