தமிழ்நாடு மருத்துவமனையை விற்கும் காஞ்சி மடம்
சென்னை:
தமிழ்நாடு மருத்துவமனையை ரூ. 105 கோடிக்கு விற்க சங்கரமடம் முடிவு செய்துள்ளது.இந்த மருத்துவமனையை உரிமை கொண்டாடுவதில் தான் போயஸ் தோட்டத்து சக்தியுடன் மோதி சிறைக்குப் போக வேண்டியநிலைக்கு சங்கராச்சியார் தள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந் நிலையில் சோழிங்கநல்லூரில் இருக்கும் இந்த தமிழ்நாடு மருத்துவமனையை விற்க சங்கராச்சாரியார் முடிவு செய்துவிட்டார்.
தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமிக்கு மருத்துவமனையை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எம்.ஏ.எம்.முதல்வருக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செட்டிநாடு மருத்துவக் கல்லூரி தொடங்க உள்ள எம்.ஏ.எம். ராமசாமி இந்த மருத்துவமனையை வாங்க முடிவு செய்துள்ளார்.
இது டிரஸ்ட் சொத்து என்பதால் விற்பதற்கு அனுமதி கேட்டு உயர் நீதிமன்றத்தில் காஞ்சி மடம் மனு தாக்கல் செய்துள்ளது.தமிழ்நாடு மருத்துவமனையை வாங்கியதால் அறக்கட்டளைக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே ரூ.105 கோடிக்குமருத்துவமனையை விற்க அனுமதி அளிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி சொக்கலிங்கம் முன்னிலைக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரிக்க விரும்பாத நீதிபதி, அதைதலைமை நீதிபதிக்கு மாற்றி அனுப்பி வைத்தார்.