ஹைதராபாத்தில் காங் மாநாடு-ஸ்தம்பித்த பாண்டி
ஹைதராபாத்:
ஹைதராபாத் நகரில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு இன்று தொடங்குகிறது.
இதில் தமிழக, மேற்கு வங்க, கேரள, அஸ்ஸாம் மாநிலங்களில் நடக்கும் சட்டசபைத்தேர்தல் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
இப்போதையே நாட்டின் அரசியல் நிலை குறித்தும், கர்நாடகத்தில் கவிழ்ந்துகொண்டிருக்கும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி குறித்தும் பேசப்படவுள்ளது.
இம் மாநாட்டில் பங்கேற்க நாடு முழுவதிலிருமிருந்து ஆயிரக்கணக்கான காங்கிரஸ்பிரமுகர்கள், லட்சக்கணக்கான தொண்டர்கள் ஹைதராபாதில் குழுமியுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் தலைமையில் மூத்த தலைவர்கள் அங்கு சென்றுவிட்டனர்.
புதுவை முதல்வர் ரங்கசாமி உள்பட மாநில காங்கிரஸ் அமைச்சர்கள், தலைவர்கள்,எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஹைதராபாத் சென்று விட்டதால் பாண்டிச்சேரிசட்டசபை வெறிச்சோடிக் காணப்படுகிறது.
அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என அனைவருமே புதுவையை காலி செய்து விட்டுப்போய் விட்டனர். இதனால் பல அரசுத் துறைகளின் அதிகாரிகளும் விடுப்பில் சென்றுவிட்டனராம். இதனால் புதுவை நிர்வாகம் தற்காலிகமாக ஸ்தம்பித்து நிற்கிறது.












Click it and Unblock the Notifications