அதிமுகவின் தேர்தல் நாடகம்: ராமதாஸ் தாக்கு
சென்னை:
பாமகவின் தொடர் வலியுறுத்தல் காரணமாகவே, வேலை திஞூயமனத் தடை உத்தரவை தமிழக அரசு நீக்கியுள்ளது. எனவே இதுபாமகவுக்குக் கிடைத்த வெற்றி என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2001ல் ஆட்சிக்கு வந்தவுடன் வேலை நியமனத் தடைச் சட்டத்தைப் பிறப்பித்தார்ஜெயலலிதா. இப்போது ஆட்சிப் போகப் போகும் கடைசி நேரத்தில் அந்தச் சட்டத்தை ரத்து செய்துள்ளார்.அவரது சமீப கால தேர்தல் அறிவிப்புகளில் இதுவும் ஒன்று. எனவே இது இன்னொரு தேர்தல் நாடகம். இச்சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று கடந்த நான்கரை ஆண்டு காலமாக பாமக போராடி வந்தது. அதன் பலனாக இன்று இச்சட்டம் ரத்தாகியுள்ளது.இது பாமகவுக்குக் கிடைத்த தனிப் பெரும் வெற்றி.
இந்தச் சட்டத்தால் கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இதனால் அரசுப் பணிகள்கடுமையாக பாதிக்கப்பட்டன. இருப்பினும் தற்போது இந்த சட்டத்தை ரத்து செய்து விட்டதால் அத்தனை பணியிடங்களும்உடனடியாக நிரப்பப்பட வாய்ப்பில்லை.
அதற்கான போதிய அவகாசமும் இந்த அரசுக்கு இல்லை. இதால் தான் தான் கடைசி நேரத்தில் சட்டத்தை வாபஸ்பெற்றிருக்கிறார்கள்.
அடுத்து அமையவுள்ள புதிய ஆட்சியில் படித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வழங்குவதற்கானநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.