சென்சார் போர்டு உறுப்பினருக்கு கொலை மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திரைப்பட தணிக்கை வாரியக் குழு உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.சென்னை எழும்பூரில் வசித்து வருபவர் ராஜேந்திரன். பட்டுக்கோட்டையைச் சேர்ந்த இவர் காங்கிரஸ் பிரமுகர் ஆவார். இவர்திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினராக இருந்து வருகிறார். ராஜேந்திரன் எழும்பூர் காவல் நிலையத்தில் ஒரு புகார்கொடுத்துள்ளார்.
அதில், திரைப்படங்களில் போதைப் பொருள் வழக்கம், தீவிரவாதம், ஆபாசம் ஆகியவற்றை எதிர்த்து நான் தீவிரமாக குரல்கொடுத்து வருகிறேன். இதனால் என்னால் பாதிக்கப்பட்ட திரைப்படத் துறையைச் சேர்ந்த சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
அடிக்கடி தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்துப் பேசி வருகின்றனர் என்று கூறியுள்ளார். இந்த புகாரின்அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications