For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விழுப்புரம் மாவட்டத்தில் விஜயகாந்த் போட்டியிட தொண்டர்கள் விருப்பம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

விழுப்புரம் மாவட்டம் கையூர் தொகுதியில் நடிகர் விஜயகாந்த் போட்டியிட வேண்டும் என்று அந்த மாவட்ட தேசியமுற்போக்கு திராவிட கழகத்தினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

அரசியல் களத்தில் குதித்துள்ள விஜயகாந்த் உடல் நலனைக் கருத்தில் கொள்ளாமல் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளார். இந்தநிலையில் வருகிற சட்டசபைத் தேர்தலில் விஜயகாந்த் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது.

தென் மாவட்டங்களில் ஏதாவது ஒரு தொகுதியிலேயே போட்டியிட விஜயகாந்த் தனிப்பட்ட முறையில் விரும்புகிறார். அதிலும்எம்.ஜி.ஆர். போட்டியிட்ட தென் மாவட்ட தொகுதிகளை அவர் இதற்காக குறி வைத்துள்ளார்.

வேடசந்தூர், மதுரை மேற்கு, விளாத்திகுளம், அருப்புக்கோட்டை ஆகிய தொகுதிகள் அவரது பரிசீலனையில் உள்ளது. அதேபோல, சிவகாசி, கோவில்பட்டி ஆகிய தொகுதிகளும் அவரது பரிசீலனையில் உள்ளது.

நாயுடு சமூகத்தினர் அதிகம் உள்ள தொகுதிகளே விஜயகாந்த்துக்குப் பாதுகாப்பான தொகுதிகள் என்று அவருக்குஅறிவுறுத்தப்பட்டுள்ளதையும் அவர் மனதில் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் விஜயகாந்த் தங்களது மாவட்டத்தில் உள்ள கையூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கோரிவிழுப்புரம் மாவட்ட தேமுதிக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் வெங்கடேசன் கூட்டத்திற்குத் தலைமைதாங்கினார். அப்போது பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வருகிற தேர்தலில் கையூரில் போட்டியிட வேண்டும்என்பதும் அதில் ஒரு தீர்மானமாகும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X