தேர்தல் கூட்டணி: ஜெ.வை சந்திக்கிறார் கார்த்திக்
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க நடிகர் கார்த்திக் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக விரைவில்முதல்வர் ஜெயலலிதாவை அவர் சந்திக்கவுள்ளார்.
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நடிகர் கார்த்திக், தேர்தல் யுத்திகள் குறித்துதீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இக்கட்சி வருகிற தேர்தலில் யாருடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் என்பதுதெரியாமல் இருந்து வந்தது.இந்த நிலையில் அதிமுகவுடன் தான் நடிகர் கார்த்திக் கூட்டணி வைப்பார் என்று, கார்த்திக்குடன் நெருக்கமாக இருக்கும் நடிகர்செந்தில் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இதை உறுதிப்படுத்தி தற்போது கார்த்திக் பேட்டி அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், பார்வர்ட்பிளாக் கட்சியில் முக்குலத்தோரைத் தவிர வேறு இன மக்களையும் சேர்க்கத் திட்டமிட்டுள்ளேன். தமிழகம் முழுவதும்பார்வர்ட் பிளாக் கட்சியின் புலிக் கொடி பறக்க வேண்டும் என்பதே எனது ஆசை.
பிளவுபட்டுள்ள பார்வர்ட் பிளாக் பிரிவுகளை இணைக்க தீவீரமாக பாடுபடுவேன். தமிழகத்தில் வலுவான அரசியல் சக்தியாகபார்வர்ட் பிளாக்கை மாற்றுவதே எனது முக்கிய நோக்கம்.
பிப்ரவரி மாதம் தீவிர தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளேன். தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கமுடிவு செய்துள்ளோம். இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவை விரைவில் சந்திக்கப் போகிறேன்.
பார்வர்ட் பிளாக் கட்சியில் நடிகர்கள் விவேக், செந்தில், நடிகை குஷ்பு ஆகியோர் சேருவார்கள். அதேபோல வேறு பல நடிகர்,நடிகைகளும் சேருவார்கள். கலையுலகினர் பெரிய அளவில் பார்வர்ட் பிளாக்கில் சேருவார்கள்.
நான் தேர்தலில் எந்தத் தொகுதியில் போட்டியிடுவது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. முதுகுளத்தூர் உள்ளிட்ட சிலதொகுதிகளை கட்சியினர் பரிந்துரை செய்துள்ளனர். பார்க்கலாம்.
நடிகர் விஜயகாந்த் குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல விரும்பவில்லை. தேர்தல் நெருங்கும்போது அவர் குறித்துப்பேசுவேன் என்றார் கார்த்திக்.