For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்கூல் பஸ்-லாரி மோதல்: 4 மாணவர்கள் பலி

By Staff
Google Oneindia Tamil News

வள்ளியூர்:

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் பள்ளிக் கூட பேருந்தும், லாரியும் போட்டி போட்டுக் கொண்டு போலீஸ் தடுப்புஅரணைத் தாண்டிச் செல்ல முயன்றதில் இரு வாகனங்களும் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாகின.

இதில் பள்ளி மாணவ, மாணவியர் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வள்ளியூரில் உள்ள அன்னை மெட்ரிகுலேஷன் பள்ளிமாணவ, மாணவியர் பள்ளி முடிந்ததும் பேருந்தில் வீடு திரும்பினர்.

அந்தப் பேருந்தை ஜெயபாண்டியன் என்ற ஓட்டுநர் ஓட்டினார். பேருந்து வள்ளியூர் பழைய பேருந்து நிலையம் அருகே,வந்தபோது எதிரே லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. சாலையின் இரு ஓரங்களிலும் போலீஸ் தடுப்பு அமைக்கப்பட்டிருந்ததால்,ஏதாவது ஒரு வாகனம் தான் அதன் வழியாக செல்ல முடியும்.

லாரியைப் பார்த்த பேருந்து ஓட்டுநர், நாம் முந்திச் சென்று விட வேண்டும் என்ற முட்டாள் தனமான வேகத்துடன், பேருந்தின்முன்புற விளக்குகளை ஒளிர விட்டுக் கொண்டு வேகமாக சென்றார்.

ஆனால் லாரி ஓட்டுநரும் விடவில்லை. அவருக்கே உரிய படு வேகத்துடன் முந்திச் செல்ல முயன்றார். இந்த போட்டியில் இருவாகனங்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதின. இதில் பள்ளிக்கூட பேருந்தில் இருந்த 3 மாணவிகளும் ஒரு மாணவனும்சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

மேலும் 9 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. பேருந்தில் பயணித்த மாணவ, மாணவியரின் உயிர் பற்றி கொஞ்சம் கூட கவலைகொள்ளாமல் ஓட்டுநர் பேருந்தை அதி வேகமாக ஓட்டிச் சென்றதாக அப்பகுதியில் உள்ளவர்கள் குமுறலுடன் கூறினர். இருவாகனங்களின் ஓட்டுநர்களும் விபத்துக்குப் பிறகு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X