For Daily Alerts
Just In
எல்லாம் அறிந்தவர் ஜெயலலிதா: காளிமுத்து
சென்னை:
படிக்காமலே எல்லாம் அறிந்தவர் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா என்று சட்டப் பேரவைத் தலைவர் காளிமுத்து தெரிவித்தார்.சட்டபேரவையில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தில் துரைமுருகன் பேசியபோது நான் எம்.ஏ. படித்துள்ளேன், அரசியல்,பொது நிர்வாகம் பயின்றுள்ளேன். நிதியியல் குறித்து எனக்குத் தெரியும். வருவாய் செலவு, மூலதன செலவு போன்றவை பற்றிஎனக்கு நன்றாகத் தெரியும் என்றார்.
இதற்கு பதிலளித்த சட்டப் பேரவைத் தலைவர் காளிமுத்து நீங்கள் சொன்ன எதையுமே படிக்காமல் அனைத்து புள்ளிவிவரங்களையும் முதல்வர் ஜெயலலிதா தம் கையில் வைத்துள்ளார் என்றார்.
காளிமுத்துவின் இந்த பதிலை அதிமுகவினர் மேஜையை தட்டி வரவேற்றனர்.
Comments
Story first published: Thursday, January 26, 2006, 5:30 [IST]