For Daily Alerts
Just In
முருகனுடன் மகள் ஆரித்ரா 3வது முறையாக சந்திப்பு
வேலூர்:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டடு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனை அவரதுமகள் ஆரித்ரா 3வது முறையாக சந்தித்துப் பேசினார்.
முருகன் மற்றும் நளினி தம்பதியினரின் 13 வயது மகள் ஆரித்ரா 8 வருட இடைவெளிக்குப் பிறகு தாய், தந்தையைக் காணஇலங்கையிலிருந்து தனது பாட்டியுடன் வந்துள்ளார்.
3 மாத விசாவில் தமிழகம் வந்துள்ள அவர் ஏற்கனவே இரு முறை முருகனையும், நளினியையும் சிறையில் சந்தித்துப்பேசினார். இந்த நிலையில் புதன்கிழமை மீண்டும் வேலூர் சிறைக்குச் சென்ற ஆரித்ரா தாய், தந்தையை மீண்டும் சந்தித்தார்.
Comments
Story first published: Thursday, January 26, 2006, 5:30 [IST]