ரயில்களை குண்டு வைத்து தகர்ப்போம்: தீவிரவாதிகள் மிரட்டல்
சேலம்:
சேலம் ரயில் நிலையத்துக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளதை தொடர்ந்து அங்கு பதட்டம் நீடிக்கிறது.
சேலம் ரயில் நிலையத்தை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக மிரட்டல் கடிதம் சேலம் ரயில் நிலைய அதிகாரி சாலமன்செவத்தையாவுக்கு வந்தது. அந்த கடிதத்தில் அனுப்புனர் என்ற முகவரியில் மாசாணமுத்து, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை,சென்னை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.மேலும் கடிதத்தில் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை நிறைவேற்றாவிட்டால் வரும் 3ம் தேதி 10 ரயில்களைகுண்டு வைத்து தகர்ப்போம் என்று எழுதப்பட்டு இருந்தது. மேலும் இது அலாவூதினின் எச்சரிக்கை என்று குறிப்பிடப்பட்டுஇருந்தது.
கடிதத்தில் எழுதப்பட்டிருந்த கோரிக்கைகளாவன:
தமிழகம் முழுவதும் சிறையில் வாடும் முஸ்லிம் சிறை வாசிகளை நிர்வாணப்படுத்தி கொடுமைபடுத்துவதையும், சித்ரவதைசெய்வதையும் உடனே நிறுத்த வேண்டும்.
எந்த வித விசாரணையும் இன்றி 9 வருடங்களாக சிறையில் வாடும் 300 முஸ்லிம் சிறைவாசிகளை ஜாமீனில் விட வேண்டும்.
முஸ்லிம் சிறைவாசிகளை கொடுமைபடுத்திக் கொண்டுள்ள சிறை அதிகாரிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
எங்கள் இனத்தை இழிவு படுத்தும் செயலை உடனடியாக நிறுத்த வேண்டும்.
இமாம் அலியை சுட்டுக் கொன்ற மாவீரர்களின் பெயர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று கோரிக்கைவைக்கப்பட்டிருந்தது. இது குறித்து உடனே செவத்தையா சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். ரயில்வே போலீசார்சென்னை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சென்னை போலீசார் இந்த கடிதம் சென்னையில் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வருகிற 4ம் தேதி சேலத்தில் நடைபெறும் 4 வழிச்சாலை தொடக்கவிழாவில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்கிறார். மேலும்திமுக தலைவர் கருணாநிதி உள்பட முக்கிய தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நேரத்தில்இந்த மிரட்டல் கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications