டேங்கர் லாரி மீது வேன் மோதி 4 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

வேலூர்:வேலூர்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த டேங்கர் லாரி மீது வேன் மோதியதில், வேனில் சென்று கொண்டிருந்த 4 பேர் பலியாயினர். 2 பேர் படுகாயமடைந்தனர்.

சென்னையிலிருந்து ஒரு டிவி குழுவினர் படப்பிடிப்புக்காக பெங்களூர் சென்றனர். மைலாப்பூரைச் சேர்ந்த டிராவல்ஸ் நிறுவனத்தின் டெம்போ டிராவலர் வாகனத்தில் அவர்கள் சென்றனர்.

படப்பிடிப்புக் குழுவினரை பெங்களூரில் இறக்கி விட்டு விட்டு ஓட்டுநர் பரமசிவம் சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். வழியில், பள்ளிகொண்டா, ஆம்பூர் ஆகிய இடங்களில் சிலரை வேனில் ஏற்றிக் கொண்டு அவர் வந்தார்.

இன்று அதிகாலை வேன், கருகம்புத்தூர் என்ற இடத்தில் வந்தபோது, சாலையோரமாக எதிர் திசையில் நின்றிருந்த டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதியது.

இதில் பரமசிவம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்தவர்களை வேலூர் அரசு மற்றும் சி.எம்.சி. மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இவர்களில் கருணாகரன், ராமச்சந்திரன் மற்றும் இன்னொருவர் சிகிச்சை பலனின்றி உயி>ழந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+