மதுரையில் சாப்ட்வேர் பூங்கா: தயாநிதி திட்டம்
மதுரை:
மதுரையில் தொழில் நுட்ப பூங்கா விரைவில் அமைக்கப்படும் என்று மத்திய தகவல்துறை அமைச்சர் தயாநிதி மாறன்தெரிவித்தார்.
என்.எம்.ஆர். சுப்பராமனின் நினைவு தபால் தலை மற்றும் தபால் உறையை மதுரை தொழில் வர்த்தக சங்க கட்டடத்தில் நடந்தநிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வெளியிட, சுப்பராமன் நூற்றாண்டு குழுவைச் சேர்ந்த ஜவஹர்பாபு, சிவபிரசாத்பெற்றுக்கொண்டனர்.இந்த விழாவில் தயாநிதி மாறன் பேசியதாவது:
மதுரையில் சாப்ட்வேர் பூங்கா அமைக்க 25 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர்ரத்தினவேலு இதற்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்ள பகுதியில் நிலத்தை ஒதுக்கி தந்துள்ளார்.
ஆனால் பூங்கா அமைப்பதற்கான இடம் 5 ஏக்கராக இருந்தாலும் நகரத்தின் மையப் பகுதியில் இருந்தால் நன்றாக இருக்கும்என்று நினைக்கிறேன். குறைந்தது 1 லட்சம் சதுர அடி நிலமாவது நகரின் மையப் பகுதியில் கிடைத்தால் தகவல் தொழில் நுட்பப்பூங்கா அமைக்கும் பணிகளை உடனே ஆரம்பிக்க உத்தரவிடுவேன் என்றார்.
மேலும் கிருபானந்த வாரியார், வ.உ.சாமிநாத அய்யர் ஆகியோருக்கு நினைவு தபால் தலை வெளியிடவும் தபால் துறை முடிவுசெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.