இலங்கை: தமிழர் அமைப்பை சேர்ந்த 5 பேர் கடத்தல்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் தமிழர் புனர் வாழ்வு அமைப்பை சேர்ந்த 5 பேர் கடத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையில் செயல் பட்டு வரும் தமிழர் புனர்வாழ்வு அமைப்பை சேர்ந்த 20 ஊழியர்கள் பயிற்சி வகுப்பு ஒன்றில் கலந்துகொள்வதற்காக மட்டக் களப்பில் இருந்து வவுனியாவுக்கு வேனில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, இவர்களின் வேனை பின் தொடர்ந்து மற்றொரு வாகனத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த சில மர்ம நபர்கள்வெலிக் கொடை ராணுவ சோதனை சாவடி அருகே வேனை மடக்கி, அதில் இருந்தவர்களில் 5 பேரை மட்டும் கண்ணில் கறுப்புதுணியை கட்டி கடத்தி சென்றுள்ளனர்.

தமிழர் புனர் வாழ்வு கழகம் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. எனவே ராணுவம் அல்லதுவிடுதலைப்புலி எதிர்ப்பாளர்களால் இந்த சம்பவம் நடந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

ஆனால் ராணுவத்திற்கு இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்பு இல்லை என்று இலங்கை அரசு கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+