அள்ளு அள்ளு.. நெசவாளர்களுக்கு ஜெ புது சலுகை
சென்னை:
விசைத்தறி நெசவாளர்களுக்கு திடீரென மின் கட்டண சலுகை வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் வரும் நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,துணி உற்பத்தி செய்வதிலும், வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதிலும் முன்னிலை வகிக்கும் விசைத்தறி தொழில், ஏற்றுமதிசெய்வதில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.
இந்த தொழிலாளர்கள் தற்போதைய மின் கட்டணத்தை குறைத்து விசைத்தறி தொழில் மேலோங்க உதவிட வேண்டும் என்றுவிசைத்தறி நெசவாளர்கள் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தக் கோரிக்கையை பரிவுடன் பரிசீலித்து விசைத்தறிக்கான மின் கட்டணத்தை குறைக்க நான் தற்போது முடிவெடுத்துள்ளேன்.
இதன் படி 2 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடும் அடிப்படையில் முதல் 1,000 யூனிட்டுகளுக்கு, யூனிட் ஒன்றுக்கு 1 ரூபாய்வீதமும், 1001 முதல் 1,500 யூனிட்டுகள் வரை யூனிட் ஒன்றுக்கு 2.25 ரூபாய் எனவும், 1,501 யூனிட்டுகளுக்கு மேல், யூனிட்ஒன்றுக்கு 2.50 ரூபாய் என்றும் மின் கட்டணம் விதிக்கப்படும்.
இவ்வாறு குறைக்கப்படும் மின் கட்டண வீதம் அனைத்து விசைத்தறி நுகர்வோருக்கும் பொருந்தும். இதனால் ஆண்டு ஒன்றுக்குதமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஏற்படும் இழப்பான 30.73 லட்சம் ரூபாயை எனது அரசு மின்சார வாரியத்திற்கு மானியமாகவழங்கும் என்று அறிக்கையில் கூறியுள்ளார் ஜெயலலிதா.