சுயநிதி கல்லூரிகள் இட ஒதுக்கீடு: கலாம் ஒப்புதல்
டெல்லி:
தனியார் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் புதிய சட்டத்துக்கு ஜனாதிபதி அப்துல் கலாம் ஒப்புதல்அளித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் என்ஜினியரிங், மருத்துவம் போன்ற தொழிற்கல்விகளில் சேர தனியார் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.இதை எதிர்த்த அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், இது தொடர்பாக மத்திய அரசு சட்டம் கொண்டு வரவலியுறுத்தினர். இதையடுத்து கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.பின்னர் இந்த மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து இந்த சட்ட மசோதா ஜனாதிபதி ஒப்பதலுக்காக அனுப்பப்பட்டது. இதற்கு ஜனாதிபதி அப்துல் கலாமும் ஒப்புதல்அளித்து கையெழுத்திட்டார். எனவே இந்த மசோதா சட்டமானது.
இதை தொடர்ந்து தனியார் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் என்ஜினியரிங் மற்றும் மருத்துவம் போன்ற தொழிற்கல்விபடிப்புகளுக்கு மாநில அரசுகளின் இட ஒதுக்கீடு செல்லும். இந்த சட்டம் சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளுக்கும்பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications