சங்கரராமன் வழக்கு: 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள.பாண்டிச்சேரி அமர்வு நீதிமன்றத்தில் சங்கரராமன் கொலை வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இன்று இவ்வழக்குவிசாரணைக்கு வந்தது.
அப்போது ஜெயேந்திரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தினகர் கூறுகையில், இவ்வழக்கில் தமிழக அரசு வழக்கறிஞர்ஆஜராகலாம் என்று புதுவை நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடுசெய்யப்பட்டுள்ளது.
அந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை இந்த விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரினார். இதை ஏற்ற நீதிபதிசின்னப்பாண்டி, வருகிற 15ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications