ஜெவின் தோல்வி பயமும் சலுகைகளும்-வாசன்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாதான் தோல்வி பயத்தில் பல்வேறு சலுகைகள், அறிவிப்புகளை சரமாரியாக அறிவித்து வருகிறார் எனமத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை இணை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தோல்வி பயம் திமுகவுக்கோ அல்லது திமுக கூட்டணிக் கட்சிகளுக்கோஇல்லை. உண்மையில் தேர்தலைக் கண்டு பயப்படுவது அதிமுகவும், ஜெயலலிதாவும்தான்.போலி எப்.ஐ.ஆர். வழக்கு, காவலர் தேர்வில் குளறுபடி, ஆசிரியர் தேர்வில் குழப்பம் என ஏகப்பட்ட பிரச்சினைகளில் சிக்கித்தவிப்பது அதிமுக அரசுதான். இதுதவிர கூட்ட நெரிசலில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் பலியானது, அரசு ஊழியர்களின்அதிருப்தி என பல்வேறு பிரச்சினைகளால் எங்கே ஓட்டு கிடைக்காமல் போய் விடுமோ என்று பயப்படுபவர் ஜெயலலிதாதான்.
இதன் காரணமாகவே, தினசரி ஒரு அறிவிப்பை, சலுகைகளை அள்ளி வழங்கி வருகிறார் ஜெயலலிதா. ஆனால் இந்தஅறிவிப்புகளை நம்பி ஏமாற மக்கள் ஏமாளிகள் அல்ல என்பதை ஜெயலலிதா புரிந்து கொள்ள வேண்டும்.
மக்கள் எண்ணங்களைப் பிரதிபலிக்கத் தவறிய அதிமுக அரசுக்கு மக்கள் வரும் தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள். 234தொகுதிகளிலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெறும் என்றார் வாசன்.












Click it and Unblock the Notifications