35 சீட்: அதிமுக, திமுகவுக்கு வைகோ நிபந்தனை
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பெயர்கள்அடங்கிய பட்டியல், முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான வரும் 24ம் தேதியன்றுவெளியிடப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலோஜெயலலிதாதான் எதிலும் முன்னணியில் இருப்பார். தேர்தல் பணிகளைத்தொடங்குவதிலிருந்து தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிப்பது வரை அத்தனையிலும்ஜெயலலிதா படு வேகம் காட்டுவார்.கடந்த சட்டசபைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலிலும் ஜெயலலிதாவேஅனைவருக்கும் முன்பாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். தேர்தல்பிரசாரத்தையும் எல்லோருக்கும் முன்பாக ஆரம்பித்தார்.
இந்த முறையும் அதுபோலவே நடைபெறும் எனத் தெரிகிறது. வருகிற 15ம் தேதி வரைபோட்டியிட விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று வருகிறது அதிமுகதலைமை. இது முடிந்ததும் வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா முடிவு செய்வார்.
இதைத் தொடர்ந்து திமுக கூட்டணியிலிருந்து யார் தங்களது கூட்டணிக்கு வரப்போவது என்று சில நாட்கள் வெயிட் பண்ணி விட்டு வரும் 24ம் தேதி தனது பிறந்தநாளன்று வேட்பாளர் பட்டியலை அவர் அறிவிப்பார் என அதிமுகவினர்எதிர்பார்க்கின்றனர்.
24ம் தேதிக்குப் பதில் அமாவாசை தினமான 26ம் தேதி பட்டியலை வெளியாகலாம்என சில அதிமுகவினர் கூறுகின்றனர்.
எப்படியிருப்பினும் திமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதி எண்ணிக்கை குறித்தபட்டியல் மார்ச் 2ம் தேதி திருச்சி திமுக மாநில மாநாட்டில் அறிவிக்கப்படுவதற்குமுன்பாக அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு விடும் என்பதில் சந்தேகம்இல்லை.
இதற்கிடையே, மதிமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஜெயலலிதாவுடன் கூட்டணிவைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வைகோவை எப்படியாவது,கூட்டணியில் தக்க வைக்க கருணாநிதி முயன்று வருகிறார்.
அதற்கு பாமகவும், காங்கிரஸும் சற்று இறங்கி வந்தால்தான் உண்டு. பாமக சீட்களைகுறைத்துக் கொள்ள முரண்டு பிடித்தால், வைகோவை நிறுத்த கருணாநிதியால் முடியாது.
மதிமுகவில் உள்ள பெரும்பாலான தலைவர்களும் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவேண்டும் என்று வைகோவை அனத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் தகவலின்படி, யார் 35 சீட் தருகிறீர்களோ அவர்களுடன் தான் கூட்டணிஎன முதல்வர் ஜெயலலிதாவுக்கும், திமுக தலைவர் கருணாநிதிக்கும் தனித்தனியாகமெசேஜ் அனுப்பியிருக்கிறார் வைகோ என்கிறார்கள்.