For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீடு புகுந்து பணம், நகையை சுருட்டிய போலீஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை ஆலந்தூரில் போலீஸ் சோதனை என்ற பெயரில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த ரூ. இரண்டரை லட்சம் ரொக்கம்மற்றும் நகைகளை சிலர் சுருட்டிச் சென்றனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.

ஆலந்தூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் சூதாட்டம் கொடி கட்டிப் பறக்கிறது. இது தொடர்பாக போலீஸாருக்கு புகார்கள்போவது வழக்கம். பேருக்கு யாரையாவது பிடித்து அவர்களிடம் வசூல் செய்வது போலீசாரின் வழக்கம்.

இந் நிலையில் ஆலந்தூரில் உள்ள சில வீடுகளை போலீஸார் சிலர் சோதனையிட்டனர்.

அப்போது குணா என்பவரின் வீட்டுக்குள் புகுந்த அவர்கள், அங்கிருந்தவர்களை வெளியே போகுமாறு கூறிவிட்டு வீடுமுழுவதையும் சல்லடைபோட்டு சோதனை நடத்தினர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவைத் திறந்து அதற்குள் இருந்த ரூ. 2.5லட்சம் பணம், சில தங்க நகைகளை பறிமுதல் செய்து கொண்டு கிளம்பினர்.

இதுகுறித்து குணாவின் வீட்டாரும், அக்கம் பக்கத்தினரும் கேள்வி எழுப்பியபோது காவல் நிலையத்திற்கு வந்து அவற்றைபெற்றுக் கொள்ளுமாறு கூறி விட்டுச் சென்று விட்டனர்.

இதைத் தொடர்ந்து குணா குடும்பத்தினர் பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். சோதனை என்ற பெயரில் வந்துபோனவர்கள் உண்மையிலேயே காவல்துறையினர்தானா அல்லது காவலர்கள் போர்வையில் வந்த திருடர்களா என்பது குறித்துபோலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X