For Daily Alerts
Just In
திருமணப் பதிவு கட்டாயமாகிறது
டெல்லி:
திருமணங்களைப் பதிவு செய்வதை கட்டாயமாக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3 மாதத்துக்குள் இதனை அமல்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிபதி அரிஜித் பசாயத், நீதிபதி கபாடியா ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்தது.திருமணத்தை கட்டாயம் பதிவு செய்யும் வகையில் 3 மாதங்களுக்குள் சட்டத் திருத்தம் கொண்டு வருமாறு நீதிபதிகள்உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவுக்கு எதிராக யாராவது மனு தாக்கல் செய்ய விரும்பினால் 1 மாதத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.
Comments
Story first published: Tuesday, February 14, 2006, 5:30 [IST]