நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஆரம்பம்
டெல்லி:
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் மக்களவை,மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில்
மத்திய அரசின் திட்டங்களே கலாமின் உரையில் இடம் பெற்றிருந்தன. அதன் முக்கிய அம்சங்ள்:டெல்லி, மும்பை விமான நிலையங்களைத் தொடர்ந்து சென்னை, கொல்கத்தா சர்வதேச விமான நிலையங்களும்நவீனப்படுத்தப்படும்.
குழந்தைகள் நலனுக்கு தனி கமிஷன் அமைக்கப்படும். தனியார் துறையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டுவரப்படும். சிறுபான்மையினருக்கு அனைத்து வகையான பாதுகாப்பும் வழங்கப்படும். மதரஸா கல்வி முறைநவீனப்படுத்தப்படும்.
மதக் கலவரத்தைத் தடுக்க சட்டம் கொண்டு வரப்படும். இது போன்ற கலவரங்களில் பாதிக்கப்படுபவர்களுக்கு மறுவாழ்வுஅளிக்க திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.
பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
காலமின் உரையைத் தொடர்ந்து அவைகள் ஒத்தி வைக்கப்பட்டன. நாளை முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் முறைப்படிதொடங்கும்.
24ம் தேதி ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தாக்கல் செய்கிறார்.
28ம் தேதி மத்திய நிதி பட்ஜெட்டை அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்யவுள்ளார். தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை மனதில் வைத்து பட்ஜெட்டில் வரிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அணு ஆராய்ச்சி விவகாரத்தில் ஈரானுக்கு எதிராகவும், அமெரிக்காவுக்கு ஆதரவாகவும் மத்திய அரசு வாக்களித்தை கடுமையாக்கண்டித்து வரும் இடதுசாரிக் கட்சிகள் இந்தக் கூட்டத் தொடரில் மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்றுதெரிகிறது.
மத்திய அரசுக்கு ஆதரவு அளித்து வரும் இடதுசாரிகள் விமான நிலைய தனியார்மயம், அன்னிய முதலீடுகள் அதிகரிப்பு ஆகியவிஷயங்களிலும் பிரதமர் மன்மோகன் சிங் அரசுக்கு நெருக்கடி தரக் கூடும்.
போர்பர்ஸ் ஊழலில் தொடர்புடைய குவோத்ராச்சியின் ரூ. 25 கோடி பணத்தை ரிலீஸ் செய்தது, பிகார் ஆட்சிக் கலைப்புக்கு உச்சநீதிமன்றம் தந்த கண்டனம், ராணுவத்தில் முஸ்லீம்கள் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு ஆகியவற்றை வைத்து பாஜகவும்புயலைக் கிளப்பவுள்ளது.
போன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தை சமாஜ்வாடிக் கட்சி பெரிதுபடுத்தி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவும்திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications