மீண்டும் போலி: வந்தது தேர்தல் ஆணைய குழு
சென்னை:
தேர்தல் ஆணையத்தின் கடும் நடவடிக்கை, உத்தரவுகளுக்குப் பின்னரும் தமிழகத்தில் மீண்டும் லட்சக்கணக்கில் போலிவாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக கோவை மாவட்டத்திலும், அமைச்சர் ஓ.பியின் தொகுதியான பெரியகுளத்திலும் போலி வாக்காளர்கள் ஏகப்பட்டஅளவில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு எதிர்க் கட்சிகள் புகார்களை அனுப்பியபடி உள்ளன. இதையடுத்து புதியவாக்காளர்களைச் சேர்ப்பதை மேற்பார்வையிட 5 பேர் கொண்ட உயர் மட்டக் குழுவை மத்திய தேர்தல் ஆணையம் அவசரமாகதமிழகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.
கே.ஆர். பிரசாத், மஜூம்தார், பர், படோலியா, வீரேந்திரகுமார் ஆகிய அதிகாரிகள் குழு இன்று அவசரமாக தமிழகம் வந்துசேர்ந்தது. இந்தக் குழு மூன்று பிரிவாக சென்னை, கோவை, கன்னியாகுமரி சென்று மனுக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.இவர்கள் 30 மாவட்டங்களிலும் ஆய்வு நடத்தவுள்ளனர். பின்னர் முறைகேடுகள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையத்துக்குஅறிக்கை தருவர்.
சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் மாநிலங்களின் தேர்தல் ஆணையர்கள், தலைமைச் செயலாளர்கள், உள்துறைச் செயலாளர்கள்,டிஜிபிக்கள் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தபோது இந்த போலி வாக்காளர்கள் விவகாரமும் விவாதிக்கப்பட்டதாகத்தெரிகிறது.
இக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, தலைமைச் செயலாளர் நாராயணன், உள்துறைச்செயலாளர் பவன் ரெய்னா, டிஜிபி அலெக்சாண்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு கைதுசெய்யப்படாமல் இருக்கும் கிரிமினல்களை உடனே கைது செய்யுமாறு அதிகாரிகளுக்கு தலைைமத் தேர்தல் ஆணையர்டாண்டன் உத்தரவிட்டார்.
மேலும் எந்தவிதமாக குற்றச்சாட்டிலும் சிக்காத காவல்துறையினரைத் தான் தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும், முறைகேடுசெய்த அதிகாரிகளை தேர்தல் பணியில் நியமிக்கக் கூடாது, தேர்தலை நடுநிலையுடன் ஒழுங்காக நடத்தி முடிக்க வேண்டும்என்றும் உத்தரவிட்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் 13 லட்சம் போலி வாக்காளர்களை அதிமுக அமைச்சர்களும் மாவட்டச் செயலாளர்களும்அவர்களுக்குப் போட்டியாக திமுகவினரும் சேர்த்ததும், அவர்கள் மீது தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்து வருவதும்குறிப்பிடத்தக்கது.